மேலும் அறிய

Tokyo Olympics:10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டிக்கு சவுரப் சௌதரி தகுதி !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர்கள் சவுரப் சௌதரி தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் முதலில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமால் ஏமாற்றம் அளித்தனர். வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

 

இந்நிலையில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் சவுரப் சௌதரி மற்றும் அபிஷேக் வெர்மா பங்கேற்றனர். இதில் தொடக்கத்தில் இந்தியாவின் சவுரப் சௌதரி தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக செயல்பட்டார். வரிசையாக 98,99,100 என மாறி மாறி நன்றாக சுட ஆரம்பித்தார். இதன் விளைவாக 95,98,98,100,98,97 என மொத்தமாக 586 புள்ளிகள் பெற்று முதலிடம் இடத்தை பிடித்தார். அத்துடன் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல்  இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றார். 

 

மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மாவும் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும் பின்னர் சிறப்பாக முன்னேறி வந்தார். இவர்  94,96,98,97,98,92  என மொத்தமாக 575 புள்ளிகள் பெற்று 13ஆவது இடத்தை பிடித்தார். அத்துடன் இவரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இழந்தார். சவுரப் சௌதரி  மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ள இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

 

முன்னதாக டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்- மானிகா பட்ரா இணை சீன் தைபே அணியிடம் 4-0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதன்மூலம் முதல் சுற்றிலேயே இந்த இணை தோல்வி அடைந்து ஏமாற்றியது. ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவியும் முதல் சுற்றில் ஹங்கேரி நாட்டின் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். 

மேலும் படிக்க:  சரத் கமல்-மானிகா, ஜூடோ வீராங்கனை சுஷிலா முதல் சுற்றிலேயே தோல்வி!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget