மேலும் அறிய

Neeraj Chopra : இந்தியாவில் இதுதான் பிரச்சனையே...! "தங்கமகன்" நீரஜ் சோப்ராவையே வேதனைப்பட வைத்தது என்ன தெரியுமா..?

தடகள வீரர் நீரஜ் சோப்ரா இந்திய வீரர்கள் அதிகளவில் சர்வதேச போட்டித் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்று அசத்தியவர் நீரஜ் சோப்ரா. சமீபத்தில் ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இந்த நிலையில், நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்திய பிறகு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

“ காமன்வெல்த் போட்டியிலும், உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், ஜூரிச்சில் நடைபெற்ற போட்டியில் நான் மட்டுமே பங்கேற்றேன் என்பது அசாதாரணமானது. மற்ற நாடுகளில் இருந்து தடகள வீரர்களின் அணிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றதை நான் பார்த்தேன். இந்தியாவும் ஏராளமான வீரர்களை இதுபோன்ற போட்டித்தொடருக்கு அனுப்ப வேண்டும்.


Neeraj Chopra : இந்தியாவில் இதுதான் பிரச்சனையே...!

சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் தற்போது உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக பங்கேற்று வருகின்றனர். மத்திய அமைச்சகத்திடமும், ஏ.எப்.ஐ., எஸ்.ஏ.ஐ.யிடமும் அதிக இந்தியர்கள் சர்வதேச விளையாட்டில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவேன். இந்தியர்கள் அதிகளவில் தலைசிறந்த தடகள வீரர்கள், உலகத்தரம் வாய்ந்த போட்டியாளர்களுக்கு எதிராக விளையாடினால்தான் ஒலிம்பிக், ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக ஆட முடியும்.

காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் முதல்நிலையை அடைய முடியாவிட்டாலும், சிறப்பாகவே ஆடினார்கள். இந்திய வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்குமாறு தேசிய அமைப்புக்கு வேண்டுகோள் விடுப்பேன். அவர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கும் உதவி செய்ய வேண்டும்.


Neeraj Chopra : இந்தியாவில் இதுதான் பிரச்சனையே...!

இந்தியாவில் தற்போது வசதிகள் வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் நம்மிடம் உள்விளையாட்டு அரங்குகள், நவீன பயிற்சிக்கூடங்கள் அமையும். நான் இப்போதுதான் இடுப்பு பகுதி காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். என்னால் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பயிற்சி செய்ய இயலாது. நான் அடுத்தாண்டு நடைபெறும் போட்டிகளில்தான் கவனம் செலுத்துகிறேன்.

இந்தியாவில் உள்ள பிரச்சினையே, எப்போதும் தங்கப்பதக்கம் வாங்க வேண்டம் என்று விரும்புகின்றனர். விளையாட்டில் மிகவும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், எப்போதும் தங்கப்பதக்கம் வெல்வது என்பது சாத்தியமல்ல. அதை அவர்கள் ஒருவேளை புரிந்துகொண்டால், ஒரு தடகள வீரருக்கு எவ்வளவு அழுத்தங்கள் உள்ளது என்று தெரிந்துகொள்வார்கள்.  ஒருவர் தோற்கும்போதும் ரசி்கர்கள் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். நல்ல தடகள வீரருக்கு பதக்கம் வெல்வது மட்டும் குறிக்கோள் அல்ல. இதை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் புரிந்துகொண்டால், ஒரு தடகள வீரர் அதிகளவிலான அழுத்தத்துடன் ஆடும்போது அந்த வீரருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்றார்.

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது நபர் நீரஜ்சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக அபினவ் பிந்தரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

மேலும் படிக்க : 36th National Games : "நேஷனல் கேம்ஸ் 2022" தொடரில் என்னென்ன போட்டிகள்..? எங்கெங்கு நடக்கிறது? முழு விவரம் உள்ளே..!

மேலும் படிக்க : World Wrestling Championships 2022 : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்! பதக்க வேட்டை நடத்துமா இந்தியா?

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Embed widget