மேலும் அறிய

Women Premier League: 5 அணிகளின் கைகளில் ரூ.17.65 கோடி.. 30 இடத்திற்காக 165 வீராங்கனைகள் களம்.. இன்று மகளிர் பிரீமியர் லீக் ஏலம்..!

ஏலத்திற்கு முன், மகளிர் பிரீமியர் லீக்கில் உள்ள 5 அணிகள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர்.

மகளிர் பிரீமியர் லீக்கின் அடுத்த சீசனுக்கான ஏலம் தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. இந்த ஏலம் மும்பையில் இன்று தொடங்குகிறது. மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்க மொத்தம் 165 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த ஏலத்தில் பங்கேற்க முதல்முறையாக பல வீராங்கனைகள் பதிவு செய்துள்ள நிலையில், சில வீராங்கனைகள் தங்கள் பல பழைய அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏலத்திற்கு முன், மகளிர் பிரீமியர் லீக்கில் உள்ள 5 அணிகள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர். இதில், மொத்தம் 60 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 29 வீராங்கனைகள் அந்தந்த அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

மகளிர் பிரிமியர் லீக்கின் ஒவ்வொரு அணிகளும் தலா 18 வீராங்கனைகளை மட்டுமே எடுக்க வேண்டும். அதன்படி, மொத்தமாக 5 அணிகளும் 90 வீராங்கனைகளை மட்டுமே எடுக்க வேண்டும். இதில், 60 வீராங்கனைகள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 30 வீராங்கனைகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது ஏலத்தில் பதிவு செய்யப்பட்ட 165 வீராங்கனைகளில் 30 வீராங்கனைகளுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. இந்த 30 வீராங்கனைகளுக்காக பங்கேற்கும் 5 அணிகள் மொத்தம் ரூ.17.65 கோடியை செலவு செய்ய இருக்கின்றனர். 

பதிவு செய்யப்பட்ட வீராங்கனைகள்: 

ஏலப் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட 165 வீராங்கனைகளில் 104 இந்திய வீராங்கனைகளும், 76 வீராங்கனைகள் வெளிநாட்டு வீராங்கனைகளும் ஆவர். ஏலப் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட இந்த வீராங்கனைகளில், 56 வீராங்கனைகள் கேப் வீராங்கனைகள் அதாவது சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள். 109 வீராங்கனைகள் (அன்கேப்ட்) சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். ஏலத்தில் சேர்க்கப்பட்ட வீரர்களின் அடிப்படை விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை. அடிப்படை விலையான ரூ.50 லட்சத்தில் இரண்டு வீராங்கனைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம் அடிப்படை விலையான ரூ.40 லட்சத்தில் நான்கு வீராங்கனைகள் உள்ளனர். இதற்குப் பிறகு, அடிப்படை விலையான ரூ.30, 20 மற்றும் 10 லட்சத்தில் வீராங்கனைகள் குவிந்துள்ளனர்.

அணி தக்கவைக்கப்பட்ட அணிகள் மொத்த செலவு தேவைப்படும் வீராங்கனைகள் மீதமுள்ள தொகை
DC 15 11.25 3 2.25
ஜி.ஜி 8 7.55 10 5.95
எம்.ஐ 13 11.4 5 2.1
ஆர்சிபி 11 10.15 7 3.35
UPW 13 9.5 5 4
மொத்தம் 60 49.85 30 17.65

1. டெல்லி கேபிடல்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், அல் ஹாரிஸ், மரிஜான் கப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷெபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தன்யா பாட்டியா, டைட்டாஸ் சாது.

வெளியிடப்பட்ட வீராங்கனைகள்: அபர்ணா மண்டல், ஜாசியா அக்தர், தாரா நோரிஸ்.

2. குஜராத் ஜெயண்ட்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, தயாளன் ஹேம்லதா, ஹர்லீன் தியோல், லாரா வோல்வொர்த், ஷப்னம் ஷகீல், சினே ராணா, தனுஜா கன்வார்.

வெளியிடப்பட்ட வீராங்கனைகள்: அனாபெல் சதர்லேண்ட், அஷ்வனி குமாரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஹர்லி காலா, கிம் கார்த், மான்சி ஜோஷி, மோனிகா படேல், பருணிகா சிசோடியா, சபினேனி மேக்னா, சோபியா டங்க்லி, சுஷ்மா வர்மா.

3.மும்பை இந்தியன்ஸ்: 

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், க்ளோ ட்ரையோன், ஹர்மன்ப்ரீத் கவுர், ஹேலி மேத்யூஸ், ஹுமைரா காசி, இசபெல் வோங், ஜிந்திமணி கலிதா, நடாலி ஸ்கிவர், பூஜா வஸ்த்ரகர், பிரியங்கா பாலா, சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா.

வெளியிடப்பட்ட வீராங்கனைகள்: தாரா குஜ்ஜர், ஹீதர் கிரஹாம், நீலம் பிஷ்ட், சோனம் யாதவ்.

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆஷா ஷோபனா, திஷா கசாட், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டெவின்.

வெளியிடப்பட்ட வீராங்கனைகள்: டேன் வான் நீகெர்க், எரின் பர்ன்ஸ், கோமல் ஜன்ஜாத், மேகன் ஷட், பூனம் கெம்னார், ப்ரீத்தி போஸ், சஹானா பவார்.

5. UP வாரியர்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: அலிசா ஹீலி, அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, லாரன் பெல், லக்ஷ்மி யாதவ், பார்ஷ்வி சோப்ரா, ராஜேஸ்வரி கெய்க்வாட், எஸ். யாஷாஸ்ரீ, ஸ்வேதா செஹ்ராவத், சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா மெக்ராத்.

வெளியிடப்பட்ட வீராங்கனைகள்: தேவிகா வைத்யா, ஷப்னம் இஸ்மாயில், ஷிவ்லி ஷிண்டே, சிம்ரன் ஷேக்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget