மேலும் அறிய

Karun Nair: ”காணாமல் போனேன், கண்டுகொள்ளாத பிசிசிஐ” களத்தில் நெருப்பை கக்கிய கருண் நாயர், பதறிய மும்பை..!

Karun Nair: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீரர் கருண் நாயர், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Karun Nair: ஐபிஎல் போட்டிகளில் ஆயிரத்து 77 நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய கருண் நாயர், மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

கருண் நாயர் அபாரம்:

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 205 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில், முதல் பந்திலேயே மெக்கர்க் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய கருண் நாயர் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி திக்குமுக்காடிப்போனது. 22 பந்துகளிலேயே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மொத்தமாக 40 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 89 ரன்களை விளாசினார்.

ஷாக்கான பும்ரா:

2022ம் ஆண்டு அதவாது ஆயிரத்து 77 நாட்களுக்குப் பிறகு நேற்றைய போட்டியின் மூலம் தான்,கருண் நாயர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கினார். அப்போது, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ராவை எதிர்கொண்டார். அவர் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சிக்சராகவும், அடுத்த பந்தை பவுண்டரியாகவும் கருண் நாயர் விளாச ஒட்டுமொத்த மைதானமும் ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்தது. அதே ஓவரில் மேலும் ஒரு சிக்சரையும் விளாச பும்ரா ஷாக்கானார். ஒட்டுமொத்த மைதானமும் கருண் நாயரின் பெயரை முழங்கியது. அதே ஓவரில் அவர் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். ஆண்டுகளில் அவர் விளாசிய முதல் ஐபிஎல் அரைசதம் இதுவாகும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தாலும், டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

காணாமல் போன கருண் நாயர்:

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் விளாசிய வீரர்களுக்கான பட்டியலில், விரேந்திர ஷேவாக்கிற்கு அடுத்தபடியாக உள்ள ஒரே வீரர் கருண் நாயர் தான். கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர், அந்த தொடரின் கடைசி போட்டியில் 303 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டியில் இந்தியா பிரமாண்ட வெற்றியை பெறவும் முக்கிய காரணமாக இருந்தார். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்துக்கொண்டே இருந்தார். ஆனாலும், இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 300 ரன்கள் அடித்தும் கூட 2017ம் ஆண்டிற்குப் பிறகு கருண் நாயருக்கும் இந்திய அணியில் வாய்ப்பே வழங்கப்படவில்லை. ரசிகர்களும் கூட 300 அடித்தும் ஏன் கருண் நாயர் அணியில் இல்லை என பலமுறை சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை டேக் செய்து கேள்வி எழுப்பினர்

கோரிக்கை வைத்த கருண் நாயர்

இதனிடையே, தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “அன்புள்ள கிரிக்கெட்டே, எனக்கு ஏன் மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடு” என கோரிக்கை விடுத்து இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். திறமைகளுக்கு மதிப்பளிக்காமல், நட்சத்திர அந்தஸ்திற்காக வீரர்களுக்கு அணியில் இடம் கொடுப்பதாக பிசிசிஐ மீது குற்றம்சாட்டினர். அதேநேரம், கருண் நாயர் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். விதர்பா அணிக்காக களம் கண்டு ரன்களை குவித்தார்.

நெருப்பை கக்கிய கருண் நாயர்:

விதர்பா அணிக்காக 2024/25 சீசனில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  சையது முஷ்டக் அலி ட்ராபியில் 6 போட்டிகளில் 255 ரன்களை குவித்தார். விஜய் ஹசாரே ட்ராபியில் 5 இன்னிங்ஸ்களில் ஆட்டமே இழக்காமல் 542 ரன்களை விளாசினார். ரஞ்சி போட்டியிலும் 16 இன்னிங்ஸ்களில் 863 ரன்களை குவித்து, விதர்பா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன் மூலமே, ரூ.50 லட்சத்திற்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே, மும்பை பந்துவீச்சை சூறையாடி கவனம் ஈர்த்தார். அவரது கம்பேக்கை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
ABP Premium

வீடியோ

Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget