மேலும் அறிய

IPL 2022: கேஎல் ராகுல், ரஷித் கான் ஐபிஎல் விளையாட ஓராண்டு தடையா... ஏன்..?

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ரஷித் கான் ஆகியோரை ஏற்கனவே லக்னோ அணி உரிமையைப் பற்றி விட்டதாக தகவல் பரவி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது.

இதனால், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், வருகின்ற ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கும் லக்னோ அணி, இன்று நடைபெறும் ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ரஷித் கான் ஆகியோரை வாங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து புதிய லக்னோ அணி,பஞ்சாப் கிங்ஸை விட்டு வெளியேற இருக்கும் கே.எல் ராகுலுக்கு ரூ. 20 கோடியை வழங்கியதாகக் கூறப்படுகிறது, அதேபோல், ரஷித் கானை தங்கள் பக்கம் வரவைக்க ரூ.16 கோடி வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஹைதாபாத் அணிஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரைத் தக்க வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் ரூ. 12 கோடிக்கு மேல் அவரை தக்கவைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. 

தற்போது ரஷித் கானுக்கு 9 கோடியும், ராகுலுக்கு 11 கோடியும் முன்தொகையாக வழங்கப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிசிசிஐக்கு புகார் அளித்துள்ளனர். அதில், கேஎல் ராகுல் மற்றும் ரஷித் கானை ஏலம் நடப்பதற்கு முன்பே எங்கள் அணியிலிருந்து விலகி புதிய லக்னோ அணிக்கு சென்றதாக புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிசிசிஐயின் முக்கிய தலைவர் தெரிவிக்கையில், இதுகுறித்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை, ஆனால் லக்னோ அணி வீரர்களை வாங்குவதாக இரண்டு அணி உரிமையாளர்களிடமிருந்து வாய்மொழியாக புகார் வந்துள்ளது. இது உண்மை என நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம். சமநிலையை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. கடுமையான போட்டி இருக்கும் போது இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

 

இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், டி20 தொடரின் நெறிமுறைகளை மீறியதற்காக கே.எல். ராகுல் மற்றும் ரஷீத்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கடந்த 2010 இல், ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸுடன் ஒப்பந்தத்தில் இருந்தபோது மற்ற உரிமையாளர்களுடன் தொடர்பில் இருந்ததால் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

GT vs RR: கில்லின் அசால்ட் சதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைடன்ஸ்
GT vs RR: கில்லின் அசால்ட் சதம்.. ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைடன்ஸ்
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
Vaibhav Sooryavanshi: சூரசம்ஹார சூர்யவன்ஷி! உடைச்ச ரெக்கார்ட் எத்தனை? படைச்ச ரெக்கார்ட் என்னென்ன?
Vaibhav Sooryavanshi: சூரசம்ஹார சூர்யவன்ஷி! உடைச்ச ரெக்கார்ட் எத்தனை? படைச்ச ரெக்கார்ட் என்னென்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget