![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gambhir on IPL: ''முதல்ல ஐபிஎல், அப்புறம்தான் இந்திய அணி'' - இளம் வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்.!
கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ட்வீட் செய்திருந்த கம்பீர், லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
![Gambhir on IPL: ''முதல்ல ஐபிஎல், அப்புறம்தான் இந்திய அணி'' - இளம் வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்.! Gautham gambhir says playing for an ipl team is different from playing for india, focus must be on the franchise Gambhir on IPL: ''முதல்ல ஐபிஎல், அப்புறம்தான் இந்திய அணி'' - இளம் வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/25/06ee535d92848b9ea3df4108b060d9d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2022 ஐபிஎல் தொடருக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிக்காக விளையாடுவதில் வீரர்கள் கவனம் செலுத்து வேண்டும், இந்திய அணிக்காக விளையாடுவதாக நினைக்க கூடாது என கருத்து தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்திருந்த கம்பீர், ”மீண்டும் களத்தில் இறங்க பெருமை கொள்கிறேன். வெற்றி கனல் இன்னும் என்னுள் எரிந்து கொண்டு இருக்கிறது. வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை இருக்கின்றது” என ட்வீட் செய்திருந்தார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர், துணை பயிற்சியாளராக விஜய் தஹியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
We wanted the best and we didn't settle for less. 💪🤩#TeamLucknow #IPL2022 @klrahul11 @MStoinis @bishnoi0056 pic.twitter.com/p9oM8M9tHy
— Lucknow Super Giants (@LucknowIPL) January 21, 2022
இந்நிலையில், லக்னோ அணி வீரர்களிடம் தனக்கு என்ன மாதிரியான எதிர்ப்பார்ப்பு என்பதை பற்றி பேசி இருக்கிறார் கம்பீர். அதில், “ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோது, நான் வீரர்களிடம் இதைதான் எப்போது சொல்லுவேன். நீங்கள் ஒரு உள்ளூர் அணிக்காக விளையாடுகிறீர்கள், இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று சொல்லுவேன். அணிக்காக விளையாடுவதையே முக்கியமாக கருத வேண்டும். இதில் நீங்கள் கவனம் செலுத்தினாலே, இந்திய அணிக்கு நீங்கள் தேர்வு செய்யப்படலாம்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும், “லக்னோவுக்காக (ஒரு ஐபிஎல் அணிக்காக) நீங்கள் விளையாடுவதால், இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நினைக்க கூடாது. முதலில், லக்னோவுக்கான முழு உழைப்பை தர வேண்டும். இந்த அணிக்காக சிறப்பாக விளையாடினாலே, இந்திய அணிக்கு நீங்கள் தேர்வாகிவிடுவீர்கள்” என தெரிவித்திருக்கிறார்.
2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல, மற்றொரு புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இன்று ட்வீட் செய்திருக்கும் கம்பீர், லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)