மேலும் அறிய

தோனிதான் எங்களுக்கு.. ஆனா டூபிளெசிஸ்... மனம் திறந்த CSK சிஇஒ விஸ்வநாதன் !

சென்னை அணியின் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது இருக்கும் 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகளும் இணைய உள்ளன. இதன்காரணமாக தற்போது இருக்கும் 8 அணிகளுக்கும் 4 வீரர்கள் வரை தக்க வைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. அதன்படி 8 அணிகளும் கடந்த 30ஆம் தேதி தங்களுடைய தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்தனர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு பேரையும் தக்கவைத்தது. அதில் அதிகபட்சமாக ஜடேஜாவிற்கு 16 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தோனிக்கு 12 கோடி ரூபாயும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 8 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மொயின் அலிக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை அணியின் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில்,”சென்னை அணிக்கு தோனி எப்போதும் ஒரு பெரிய சொத்தாக இருந்துள்ளார். அவர்தான் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வெற்றிகளை தந்துவரை. எனவே எங்களை பொறுத்தவரை அவருடைய அனுபவம் தான் மற்ற வீரர்களுக்கு கை கொடுக்கும். அவர் எந்த அணியை வைத்து விளையாடினாலும் அதன் பெஸ்டை வெளியே கொண்டு வருவார். அவருடைய கேப்டன்ஷிப் திறன் குறித்து யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இம்முறை ஐபிஎல் தொடர் சென்னைக்கு திரும்பும் பட்சத்தில் அது நமக்கு நல்லதாக அமையும். ஏனென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சென்னை அணிக்கு ஒரு ராசியான மைதானம். மேலும் அங்கு வரும் சென்னை ரசிகர்கள் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். இந்த முறை மைதானம் முழுவதும் ரசிகர்களுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

டூபிளசிஸ் சென்னை அணிக்கு ஒரு முக்கியமான வீரர். அவர் இரண்டு முறை சென்னை அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஆகவே அவரை ஏலத்தில் மீண்டும் திரும்பி எடுக்க நாங்கள் முயற்சிப்போம். அவரை திருப்பி எடுப்பது நம் கையில் இல்லை. ஆனாலும் நாங்கள் தீவிரமாக அதற்கு முயற்சி செய்வோம்” எனக் கூறியுள்ளார். 

சென்னை அணியில் இருந்து ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ உள்ளிட்ட வீரர்கள் வெளியே சென்றதற்கு சென்னை ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் சிஇஓ விஸ்வநாதனின் பேச்சு அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி மீண்டும் இந்த வீரர்கள் திரும்பி எடுக்கும் என்றும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 

மேலும் படிக்க: 16 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெரிய முடியுடன்.. தோனியும் அன்பு டென் சேப்பாகமும் சந்தித்த நாள்!

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget