மேலும் அறிய

தோனிதான் எங்களுக்கு.. ஆனா டூபிளெசிஸ்... மனம் திறந்த CSK சிஇஒ விஸ்வநாதன் !

சென்னை அணியின் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது இருக்கும் 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகளும் இணைய உள்ளன. இதன்காரணமாக தற்போது இருக்கும் 8 அணிகளுக்கும் 4 வீரர்கள் வரை தக்க வைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. அதன்படி 8 அணிகளும் கடந்த 30ஆம் தேதி தங்களுடைய தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்தனர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு பேரையும் தக்கவைத்தது. அதில் அதிகபட்சமாக ஜடேஜாவிற்கு 16 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தோனிக்கு 12 கோடி ரூபாயும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 8 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மொயின் அலிக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை அணியின் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில்,”சென்னை அணிக்கு தோனி எப்போதும் ஒரு பெரிய சொத்தாக இருந்துள்ளார். அவர்தான் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வெற்றிகளை தந்துவரை. எனவே எங்களை பொறுத்தவரை அவருடைய அனுபவம் தான் மற்ற வீரர்களுக்கு கை கொடுக்கும். அவர் எந்த அணியை வைத்து விளையாடினாலும் அதன் பெஸ்டை வெளியே கொண்டு வருவார். அவருடைய கேப்டன்ஷிப் திறன் குறித்து யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இம்முறை ஐபிஎல் தொடர் சென்னைக்கு திரும்பும் பட்சத்தில் அது நமக்கு நல்லதாக அமையும். ஏனென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதும் சென்னை அணிக்கு ஒரு ராசியான மைதானம். மேலும் அங்கு வரும் சென்னை ரசிகர்கள் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். இந்த முறை மைதானம் முழுவதும் ரசிகர்களுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

டூபிளசிஸ் சென்னை அணிக்கு ஒரு முக்கியமான வீரர். அவர் இரண்டு முறை சென்னை அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஆகவே அவரை ஏலத்தில் மீண்டும் திரும்பி எடுக்க நாங்கள் முயற்சிப்போம். அவரை திருப்பி எடுப்பது நம் கையில் இல்லை. ஆனாலும் நாங்கள் தீவிரமாக அதற்கு முயற்சி செய்வோம்” எனக் கூறியுள்ளார். 

சென்னை அணியில் இருந்து ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ உள்ளிட்ட வீரர்கள் வெளியே சென்றதற்கு சென்னை ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் சிஇஓ விஸ்வநாதனின் பேச்சு அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி மீண்டும் இந்த வீரர்கள் திரும்பி எடுக்கும் என்றும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 

மேலும் படிக்க: 16 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெரிய முடியுடன்.. தோனியும் அன்பு டென் சேப்பாகமும் சந்தித்த நாள்!

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget