மேலும் அறிய

கடைசி போட்டியில் ரோஹித்தின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்த அம்பத்தி ராயுடு…!

இந்த போட்டியோடு அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது. தோனி கோப்பையை அவரது கையில் வாங்க சொன்னது நேற்றைய போட்டியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திங்கள்கிழமை (மே 29) நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) குஜராத் டைட்டன்ஸ் அணியை த்ரில்லிங் போட்டியில் தோற்கடித்து ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ரவீந்திர ஜடேஜா கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்களை அடித்து லைனைக் கடக்க உதவினார். சென்னை அணி இம்முறை கோப்பையை வென்றிருப்பது அந்த அணியின் ஒட்டுமொத்த முயற்சி ஆகும். அணியில் எல்லா வீரர்களுமே பங்களித்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வென்று, ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி மும்பை அணியை சமன் செய்துள்ளது. 

மழையால் ஓவர்கள் குறைப்பு

இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கவிருந்த ஞாயிற்றுக்கிழமை மழையால் கைவிடப்பட்டு, பின்னர் திங்கள் கிழமை போட்டி துவங்கி, செவ்வாய் கிழமை வரை கடந்து, ரிசர்வ் நாளில் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் ரிசர்வ் நாளிலும் மழை பெய்ய, ஆட்டம் மேலும் தமாதமானது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் 15 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால் இலக்கு 215 இல் இருந்து 171 ஆக மாற்றப்பட்டது. சென்னை அணியின் கான்வே நன்றாக ஆடி ரன்னை உயர்த்த, கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் தொடர்ந்து நான்கு யார்க்கர்களை கச்சிதமாக வீசினார். அந்த நான்கு பந்துகளில் அவர் வெறும் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். 

கடைசி போட்டியில் ரோஹித்தின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்த அம்பத்தி ராயுடு…!

கோப்பையை வென்ற சென்னை

ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை வெல்லும் மூன்றாவது அணி என்ற பெயரை பெற குஜராத் அணி வெறித்தனமாக விளையாடியது. ஆனால் மோஹித் ஷர்மா ஐந்தாவது பந்தில் யார்கரை கொஞ்சம் மிஸ் செய்ய, அதனை சிக்சருக்கு அனுப்பினார் ஜடேஜா. ஜிடி அணியினர் மீது பிரஷர் அதிகரிக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மோஹித்திடம் ஓடி வந்து நீண்ட நேரம் பேசினார். ஆனால் மோஹித் இந்த முறை லைன் மற்றும் லெங்த்தை முழுவதும் தவறவிட்டார். ஜாடேஜாவின் கால்களில் லோ ஃபுல் டாசாக வீச, அதனை லேசாக தட்டி பவுண்டரிக்கு அனுப்பினார் ஜடேஜா.

தொடர்புடைய செய்திகள்: CM Stalin Wish CSK: 'தோனியின் தலைமையின் கீழ் 5வது கோப்பை..' சி.எஸ்.கே.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

ராயுடு ஓய்வு

இந்த பட்டத்தை வென்றதன் மூலம், மும்பை இந்தியன்ஸுடன் இணைந்து 5 கோப்பைகள் வென்று சிஎஸ்கே மிகவும் வெற்றிகரமான அணியாக மாறியது மட்டுமல்லாமல், அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற வீரர் என்ற பெருமையையும் அம்பதி ராயுடு பெற்றார். இந்த போட்டியோடு அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது. தோனி கோப்பையை அவரது கையில் வாங்க சொன்னது நேற்றைய போட்டியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு ரோஹித் ஷர்மா மட்டுமே ஒரு வீரராக 6 முறை கோப்பையை வென்ற வீரராக இருந்த நிலையில், ராயுடு அவரை சமன் செய்தார். மறுபுறம், எம்.எஸ். தோனி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று, கீரன் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் சமன் செய்தார்.

ராயுடு பேட்டி 

போட்டிக்குப் பிறகு, ராயுடு உணர்ச்சிவசப்பட்டு, தனது வாழ்க்கையில் இது ஒரு விசித்திரமான கதை என்று கூறினார். "இது ஒரு விசித்திரக் கதை, நான் இதற்கு மேல் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. இது நம்பமுடியாத விஷயம். சென்னை, மும்பை போன்ற சிறந்த அணிகளில் விளையாடியது உண்மையில் அதிர்ஷ்டம். இந்த வெற்றி எனது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். இந்த வெற்றியோடு என் 30 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு முடிந்ததில் மகிழ்ச்சி. இந்த தருணத்தில் எனது குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், என் தந்தைக்கு நன்றி தெரிவிக்கவும் விரும்புகிறேன், அவர் இல்லாமல் நான் இன்று இங்கு இருந்திருக்க முடியாது," என்று அவர் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
Embed widget