மேலும் அறிய

WPL 2023: மிரட்டப்போகும் சிங்கப்பெண்கள்..! மார்ச் 4-ந் தேதி தொடங்குகிறது மகளிர் ஐ.பி.எல்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். வரும் மார்ச் 4-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு என்றே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஐ.பி.எல். போட்டிகளை பெண்களுக்கும் நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து, 2023ம் ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

மகளிர் ஐ.பி.எல்.

நடப்பாண்டிற்கான முதல் சீசனுக்கான ஐ.பி.எல் ஏலம் வரும் 13-ந் தேதி நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 1500 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் ஐ.பி.எல். சீசன் என்பதால் மொத்தம் 5 அணிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், மகளிர் ஐ.பி.எல். போட்டி எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மகளிர் ஐ.பி.எல். போட்டிகள் வரும் மார்ச் 4-ந் தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள 5 அணிகளுக்கும் இன்று மின்னஞ்சல் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏலத்தில் 1500 வீராங்கனைகள்:

மொத்தம் 1500 வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த ஏலத்தில் 90 வீராங்கனைகள் மட்டுமே தேர்வாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது அணிக்காக ஏலத்தில் 15 முதல் 18 வீராங்கனைகளை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.  மகளிர் ஐ,பி.எல். போட்டிகள் முழுவதும் மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்திலும், டி.ஒய். பாட்டீல் மைதானத்திலும்தான் நடக்க உள்ளன.

தற்போது இந்திய அணி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறது. உலகக்கோப்பை டி20 தொடர் வரும் பிப்ரவரி 26-ந் தேதி நிறைவடைய உள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இந்த தொடர் முடிவடைந்த 8 நாட்களில் மகளிர் ஐ.பி.எல். தொடர் தொடங்க உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் பெண்களுக்கான ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

5 அணிகள்:

ஏற்கனவே இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமை வியாகாம் நிறுவனம் 951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அதாவது 2023 முதல் 2027 வரை காலகட்டத்திற்கு இந்த ஒளிபரப்பு உரிமம் அடங்கும். மகளிர் ஐ,பி.எல். ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகளை அதானி குழுமம், இந்தியாவின் குழுமம், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம், ஜே.எஸ்.டபுள்யூ ஜி.எம்.ஆர். கிரிக்கெட் குழுமம், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் குழுமம் வாங்கியுள்ளனர்.

 இனி வரும் காலங்களில் இந்த 5 அணிகள் என்பது அதிகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இப்போது முதல் ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. மும்பை அணி டி20 மற்றும் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் எட்வர்ட்சை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்தியாவின் அசத்தல் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: IND vs AUS Test: ஆஸ்திரேலியாவிற்கு மரண அடி கொடுத்த இந்தியாவின் மறக்க முடியாத வெற்றிகள்..! ஓர் அலசல்

மேலும் படிக்க: Womens T20 World Cup: ஆஸ்திரேலியாவை புரட்டியெடுக்க புயலாய் களமிறங்கும் இந்திய அணி.. பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதல்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget