மேலும் அறிய

Suresh Raina: ஐபிஎல் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரெய்னா

அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளிலும் மட்டும் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டிற்காகவும், உத்தரபிரதேசத்திற்காகவும் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையான ஒன்று. அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவிக்கிறேன். பிசிசிஐ, உபி கிரிக்கெட் சங்கம் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சுரேஷ் ரெய்னா வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக இந்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி சுரேஷ் ரெய்னா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் இந்த முடிவை உத்தரபிரதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இவை தவிர தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட டி20 தொடர்களிலுள்ள அணிகளுடன் சுரேஷ் ரெய்னா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளிநாட்டு டி20 தொடர்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுரேஷ் ரெய்னா இதுவரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகளில் விளையாடி 768 ரன்களும், 226 ஒருநாள் போடிகளின் விளையாடி 5,615 ரன்களும், 78 டி20 ஆட்டங்களில் விளையாடி 1,605 ரன்களும் எடுத்துள்ளார். ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 32.52 சராசரியில் 5528 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கணக்கில் ஒரு சதம் மற்றும் 39 அரைசதங்கள் உள்ளன. இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 சீசன்களில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் 4 சாதனைகள் :

  •  ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன்
  • ஐபிஎல்    தொடரில் அதிக கேட்ச் பிடித்த வீரர்
  • சிஎஸ்கே அணிக்காக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்
  • சிஎஸ்கே அணிக்காக அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்

இவ்வாறு பல்வேறு சாதனைகளை சுரேஷ் ரெய்னா தன்வசம் வைத்துள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் ரெய்னா ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Embed widget