மேலும் அறிய

Rohit WTC Final: என்ன செஞ்சு இருக்கிங்க ரோகித் சர்மா? ரவுண்டு கட்டி விளாசும் மூத்த வீரர்கள்.. நடந்தது என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மூத்த வீரர்கள் பலரும் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா:

இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டுள்ளது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 76 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், ஸ்மித் மற்றும் டிராவிஸ்  ஹெட் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. இதனால், முதல் நாள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்களை குவித்துள்ளது. ஸ்மித் 95 ரன்களையும், ஹெட் 146 ரன்களையும் குவித்து களத்தில் உள்ளனர்.

சொதப்பினாரா ரோகித்?

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தொடர்ந்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணி தவறிவிட்டது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்யாததும், பல இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படாததும் தவறு எனவும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு, பீல்டிங்கின் போது ரோகித் சர்மா கோபப்பட்டு ஒரு வீரரை திட்டுவது போன்ற வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு, இந்திய அணி செயல்பாடு தொடர்பாக பல மூத்த வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

”ரன் அடிக்க விட்ட ரோகித்”

இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், "டிராவிஸ் ஹெட் நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்பது அழுத்தமான சூழல் தான். ஆனாலும், டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். இதற்கான வாய்ப்பை தனது பீல்டிங் அமைப்பின் மூலம் ரோகித் சர்மா உருவாக்கி கொடுத்துவிட்டார். அவரை எளிதாக ரன்களை அடிக்க இந்திய அணி வாய்ப்பை உருவாக்கி கொடுத்து விட்டது" என தெரிவித்துள்ளார்.

அஸ்வின் ஏன் இல்லை? - கவாஸ்கர்

போட்டியின் முதல்நாள் முடிவில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டை, முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதன்படி "ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுக்காததன் மூலம் இந்தியா தனது தந்திரத்தை தவறவிட்டுள்ளது.  நீங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறீர்கள், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலரை நீங்கள் தேர்வு செய்யவில்லை. இந்திய அணியின் இந்த முடிவு எனக்கு புரியவில்லை. உமேஷ் யாதவுக்குப் பதிலாக அவரை நான் தேர்ந்தெடுத்திருப்பேன். ஆஸ்திரேலிய அணியில் 4 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாக செயல்பட்ட வரலாறு உண்டு. ஆனால், இந்திய அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் கூட இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Embed widget