மேலும் அறிய

Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. செக் வைக்கும் பாகிஸ்தான்.. அதிர்ச்சியில் ஐசிசி

Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும், ஐசிசிக்கு பாகிஸ்தான் வாரியம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால்   தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி தொடர்:

நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி  தொடங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக 2017 ஆம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது.

முரண்டு பிடிக்கும் பிசிசிஐ:

இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது. மேலும் இந்திய விளையாடும் போட்டிகளை ஐக்கிய அமீரகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பிசிசிஐ நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது. 

இந்த நிலையில் பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்: Vistaras last day: முடிந்தது விஸ்தாரா விமான சேவை - ஏர் இந்தியா சம்பவம், இந்தியாவில் சரியும் எண்ணிக்கை

ஐசிசி-க்கு எச்சரிக்கை

அதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும்,இந்திய அணி பரிந்துரைத்துள்ள ஹைபிரிட் மாடலில் ( Hybrid model) போட்டிகளை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கடிதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் ஐசிசி மொத்த தொடரையும் பாகிஸ்தானில் இருந்து மாற்றம் செய்து தென் ஆப்பிரிக்காவில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அப்படியில்லை என்றால் இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்தினால் போட்டிக்காக விற்பனை செய்யப்படும் டிக்கெட் தொகை முழுவதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமே கொடுக்க ஐசிசி முடிவு செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசு, தொடரை இங்கிருந்து மாற்றி வேறு இடத்தில் நடத்தினாலோ அல்லது இந்திய அணி பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலில் போட்டிகளை நடத்தும் பட்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கலந்து கொள்ளக்கூடாது என்று பாக் கிரிக்கெட் வாரியத்திடம் அந்நாட்டு அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதா சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கூட பாகிஸ்தானில் தான் நடைப்பெற்றது. ஆனால் இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது. இந்திய அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் சென்றது. பாகிஸ்தான் அணியும் 2012-ஆம் தான் கடைசியாக இந்தியா வந்து ஒரு நாள் தொடரில் விளையாடியது. அதன் பிறகு இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி விளையாடின. இந்த விவகாரத்தில் வெகு விரைவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விரைவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று ஐசிசி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Embed widget