Rohit Sharma Century: டெஸ்ட் போட்டிகளில் 9-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா.. மீண்டு வந்த ஹிட்மேன்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 9வது சதம் இதுவாகும்.
Smiles, claps & appreciation all around! 😊 👏
— BCCI (@BCCI) February 10, 2023
This has been a fine knock! 👍 👍
Take a bow, captain @ImRo45 🙌🙌
Follow the match ▶️ https://t.co/SwTGoyHfZx #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/gW0NfRQvLY
பார்டர் கவாஸ்கர் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைதொடர்ந்து, களமிறங்கிய அந்த அணி வீரர்கள், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
250 சிக்சர்களை விளாசிய ரோகித்:
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான் கேப்டன் ரோகித் சர்மாவும், துணை கேப்டனான கே.எல்.ராகுலும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோகித் சர்மா சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். முதல் நாளில் ஒரு சிக்சரை விளாசியதன் மூலம், இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 250 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரோகித் 56 ரன்களை எடுத்து இருந்தார்.
இரண்டாவது நாளில் சதம்:
போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, அஸ்வின் மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம், ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் சதம்:
முன்னதாக, கடந்த 2021ம் அண்டு செப்டம்பர் மாதம் தான் அவர் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசி இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில், அவர் 127 ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets