மேலும் அறிய

Nirmala Sitharaman: மக்கள் தலையில் குவியும் வரிகள் - ரெண்டே கேள்வி; வாயடைத்துப் போன நிர்மலா சீதாராமன்..!

Nirmala Sitharaman: புரோக்கர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பதில் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Nirmala Sitharaman: பதில் சொல்ல முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பதிலுக்கு,  எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

நிர்மலா சீதாராமனிடம் கேள்வி:

மும்பையில் `இந்திய நிதிச்சந்தையின் பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.  இதில் முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை புரோக்கர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட உரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புரோக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினர். அந்த வகையில் ஒரு புரோக்கர், ``முதலீட்டாளர்கள் அபாயங்களை எதிர்கொண்டு, பணத்தை முதலீடு செய்கின்றனர். ஆனால் அரசு கடுமையான வரிகளை விதிக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அரசு சி.எஸ்.டி, ஐ.சி.எஸ்.டி, முத்திரை தீர்வை, எஸ்.டி.டி, நீண்டகால கேபிடள் கெய்ன் வரி போன்ற வரிகளை விதிக்கிறது. இதனால் அரசு, புரோக்கர்களைவிட அதிகமாக சம்பாதிக்கிறது. முதலீட்டாளர்களும், புரோக்கர்களும் அபாயங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அரசுக்கு அது போன்ற பிரச்னை இல்லை.

மத்திய அரசு ஸ்லீப்பிங் பார்ட்னரா?

அனைத்து வகையான நிதி முதலீட்டு அபாயங்களையும் நாங்கள்  எதிர்கொள்கிறோம். ஆனால் அனைத்து விதமான லாபங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. நீங்கள் எனது சிலீப்பிங் பார்ட்னர். நான் வேலை செய்யும் பார்ட்னர். ஒரு வீட்டை வாங்குவதற்கு செலுத்த வேண்டிய வரிகள் என்னென்ன? ஸ்டாம்ப் டியூட்டி, ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் ஒரு வீடு வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும். மும்பையில் ஒரு வாங்கினால் 11 சதவிகிதம் வரி கட்ட வேண்டி உள்ளது. குறைந்த வளங்களே கொண்டுள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது. அரசு போடும் வரிகளை கடந்த ஒரு முதலீட்டாளர் எப்படி செயல்பட முடியும்” என்றார்.

நிர்மலா சீதாராமன் சொன்ன பதில் என்ன?

புரோக்கர் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு தன்னிடம் பதில் இல்லை என முதலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். அதன்பிறகு, ஸ்லீப்பிங் பார்ட்னர், இங்கு அமர்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கமாட்டார்' என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதை சொன்னதும் அரங்கில் இருந்த பலரும் சிரித்துள்ளனர். தொடர்ந்து பேசுகையில், ”மோடி அரசு கொண்டு வந்த கொள்கைகளால் நாட்டில் கடந்த 10 ஆண்டில் ஏராளமான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டில் 3.74 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்தில் கிராமத்தில் சாலைகளின் அளவு இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தால் நகரங்களில் போக்குவரத்து மேம்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைந்து பாதுகாப்பான பயணத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கண்டங்களும், விமர்சனங்களும்:

பொதுமக்கள் வரிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் அமைச்சர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. நிர்மலா சீதாராமனின் பதிலுக்கு சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். அதில் ஒருவர் “நீங்கள் கேட்டது நல்ல கேள்வி, ஆனால் அது என்னை காயப்படுத்தி விட்டது” என நிர்மலா சீதாராமன் பேசுவதாக பதிவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget