மேலும் அறிய

Rohit Sharma: தொடக்க வீரராக 10 ஆண்டுகள் நிறைவு.. 3 இரட்டை சதங்கள்.. பல சாதனைகளை கொத்தாக அள்ளிய ரோஹித்தின் பாதை!

ஒருநாள் வரலாற்றில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித சர்மா மட்டுமே தனது கைகளில் வைத்துள்ளார்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் ஜனவரி 24, 2013 அன்று, ரோகித் சர்மா முதல் முறையாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக ஷிகர் தவானுடன் களமிறங்கினார். இதுதான் ரோகித் சர்மாவின் 2.0 என்றே கூறலாம். இதற்கு பிறகே, ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலிக்க தொடங்கினார். 

தற்போது, இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பார்மில் இல்லை என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றும் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒருநாள் வரலாற்றில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித சர்மா மட்டுமே தனது கைகளில் வைத்துள்ளார். ஒருநாள் தொடக்க வீரராக தனது 10 வது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கும் ரோகித் சர்மா, இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தனது மூன்று ஆண்டுகால சத வறட்சியை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபியில் இந்திய அணி சில பயிற்சி போட்டிகளில் விளையாடியது. அப்போது, இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்த முரளி விஜய் சொதப்பினார். இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக அப்போதைய கேப்டன் எம்.எஸ். தோனி கொண்டு வந்தார். 

அந்த நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு, தற்போது இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். இதுவரை 240 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 48.65 சராசரியுடன் 9681 ரன்கள் எடுத்துள்ளார். 

அதே நேரத்தில், தொடக்க வீரராக ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 55. 93 சராசரியுடன் 7663 ரன்கள் எடுத்துள்ளார். 


ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவின் சாதனை:

  • ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர்.
  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 264 ரன்கள் அடித்துள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு தொடக்க வீரராக 27 சதங்கள் அடித்துள்ளார்.
  • ஒரே உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்துள்ளார்.
  • ரோகித் சர்மா சதம் அடிக்கும்போது, இந்திய அணி 70% வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 10 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ ரோகித் சர்மா ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். அவரை 17 வயதில் முதன்முறையாக பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது. ரோகித் சர்மா கடந்த 15 ஆண்டுகளாக என்ன செய்தார் என்பது நமக்கு நன்கு தெரியும்.  அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த சேவகர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரோகித்  ஓப்பன் செய்யும் வாய்ப்பைப் பெற்ற பிறகுதான், இந்திய அணிக்கும் அவருக்கும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. 

அதனால்தான் பெரிய ரன்களை குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ஒருநாள் பார்மேட்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர். இது முற்றிலும் ஒரு அற்புதமான சாதனையாகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
Embed widget