மேலும் அறிய

ICC Men's Player of the Month award: அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்...!

அக்டோபர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.

அக்டோபர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் 2 பிரிவில் இடம்பெற்ற இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை தவிர எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தது.

அனைத்து ஆட்டங்களிலும் கோலி சிறப்பாக விளையாடினார். பெரும்பாலான ஆட்டங்களில் அரை சதம் விளாசினார். இந்நிலையில், கடந்த மாதத்துக்கான சிறந்த வீரராக அவரை தேர்வு செய்து ஐசிசி கெளரவித்துள்ளது.

முன்னதாக, டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றின் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி இந்தப் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. 

இந்தப் போட்டியில் 64 ரன்கள் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் முறியடித்தார். அதாவது ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கர் அடித்து இருந்த 3300 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் 3350 ரன்கள் விளாசியுள்ளார். 84 இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 3300 ரன்களை விராட் கோலி தாண்டினார். 

Danushka Gunathilaka: பாலியல் புகாரில் கைது: கிரிக்கெட் வீரர் குணதிலகவுக்கு இலங்கை அணியில் விளையாட தற்காலிகத் தடை

அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி வென்றார். அதாவது ஐசிசி தொடர் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்தியர் என்ற சாதனையை கோலி, சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் ஐசிசி தொடர் போட்டிகளில் 10 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

குரூப் 2 பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்களை குவித்தார். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் மட்டும் விராட் கோலி, சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை டி20 தொடரில் கோலியின் செயல்பாடு மெச்சும் வகையில் இருந்தது. அதற்கான சரியான வெகுமதியை ஐசிசி வழங்கி கெளரவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget