மேலும் அறிய

Pakistan World Cup 2023: கிரிக்கெட்டை அரசியலாக்காதீங்க.. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வேண்டுகோள்..

பிசிபியின் செயல் தலைவர் ஜகா அஷ்ரஃப் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் உலகக் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடங்களில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஐசிசி உலகக்கோப்பை போன்ற மிகவும் பிரமாண்டமான தொடருக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பாதது, பாகிஸ்தான் மக்கள் ஆவலுடன் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காணமுடியாத சூழல் ஏற்படும் எனக் கூறியுள்ளார். 

கிரிக்கெட் உலகில் எல்-கிளாசியோ போட்டி என்றால் அது இந்தியா பாகிஸ்தான் மோதல்தான், அப்படி இருக்கும்போது,  "இரு நாடுகளுக்கு இடையே மற்ற விளையாட்டுகளில் தொடர்புகள் இருக்கும்போது, ​​கிரிக்கெட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல. கிரிக்கெட்டை ஏன் அரசியலுக்குள் இணைக்க வேண்டும்? தங்கள் அணிகள் ஒருவருக்கொருவர் விளையாடுவதைப் பார்க்கும் வாய்ப்பை மக்கள் இழப்பது நியாயமற்றது" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் கூறினார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐக்கு தெரிவித்தது என்னவென்றால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது பாகிஸ்தான் அரசின் அனுமதிக்கு உட்பட்டது என்பதுதான். 

அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்தியா தனது ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது, மேலும் பல மாதங்களாக ஆசிய அளவிலான  போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாமல் இருந்தது.  ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிசிபியின் செயல் தலைவர் ஜகா அஷ்ரஃப் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் உலகக் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடங்களில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

இதனை சுட்டிக்காட்டி மிஸ்பா பேசுகையில், பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லவேண்டிய நேரம் என்றும், இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு போட்டிகளில் விளையாட வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

"நிச்சயமாக பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டும்” என்று அவர் கூறினார். 

அதேபோல், "நான் இந்தியாவில் பலமுறை விளையாடியபோது, ​​நாங்கள் அங்குள்ள அழுத்தத்தையும் கூட்ட நெரிசலையும் அனுபவித்திருக்கிறோம். அது உங்களுக்கு உத்வேகத்தையும், இந்தியாவில் எங்களுக்கு ஏற்ற சூழ்நிலையையும் தருகிறது. இந்திய சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்படும் திறன் எங்கள் அணிக்கு உள்ளது” எனவும் போட்டி மற்றும் உலகக் கோப்பையை வெல்வதில் மட்டும் கவனம் செலுத்துமாறு வீரர்களுக்கு மிஸ்பா அறிவுறுத்தினார். அதேபோல் அஃப்ரிடியும் பாகிஸ்தான் அணி உலககோப்பையில் விளையாட இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார் 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Embed widget