மேலும் அறிய

Border Gavaskar Trophy:ரோஹித் ஷர்மா கேப்டன்சி வேண்டாம்..பும்ரா கிட்ட பொறுப்ப கொடுங்க!கொதித்த முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணைக் கேப்டனான பும்ராவை கேப்டாக நியமிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணைக் கேப்டனான பும்ராவை கேப்டாக நியமிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி:

சொந்த நாட்டில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. மோசமான இந்த தோல்வி இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் முறையில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இச்சூழலில் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக நவம்பர் 10 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்த பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்.

அதோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெற மாட்டர் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சூழலில் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய கேப்டனை அறிவிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். அதேபோல், இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாட வந்தாலும் அவரை சாதரண வீரராக மட்டுமே விளையட வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

கேப்டன் பொறுப்பை பும்ராவிடம் கொடுங்கள்:

இந்த நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "ரோஹித் ஷர்மா எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடவில்லை என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் கேப்டனாக விளையாடக் கூடாது என்று தெரிவித்திருந்தார். அதனால் துணை கேப்டனான பும்ராவை உடனடியாக கேப்டனாக அறிவிக்க வேண்டும். ஒரு கேப்டன் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றால், அது மிகப்பெரிய தவறு. அதனால் சுனில் கவாஸ்கர் சொல்வதில் எந்த தவறும் கிடையாது.

கடந்த முறை விராட் கோலி ஒரு போட்டியில் விளையாடிவிட்டு, அடுத்த 3 போட்டிகளில் விளையாடவில்லை. அதனை முன்கூட்டியே அனைவருக்கும் கூறியதால், ரஹானே பொறுப்புக்கு வருவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இதனால் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான போதும், 2வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய கம்பேக்கை இந்திய அணி நிகழ்த்தியது. கேப்டன் இல்லாமல் இந்திய அணி விளையாடுவது முதல்முறையல்ல. விராட் கோலி முன்கூட்டிய ரஹானேவை தயார் செய்தார்.

ஆனால் ரோஹித் ஷர்மா தரப்பில் பும்ராவிடம் பொறுப்பை கொடுக்க தயக்கம் காட்டுகிறார். அதேபோல் தேர்வுக் குழுவும் ரோஹித் ஷர்மா விவகாரத்தில் என்ன செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அவரால் முதல் போட்டியில் விளையாட முடிந்தால், சிக்கல் இருக்காது என்பதால் முடிவு எடுக்காமல் இருப்பதாக" தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget