மேலும் அறிய

IND vs ENG: இந்திய அணிக்கு பெரும் சிக்கல்! ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்ன காரணம்?

ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முழுமையாக விளையாடமாட்டார் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ராஜ்கோட்டில் நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், ரவிசந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். இருப்பினும், இந்த சாதனைக்கு பிறகு, அஸ்வின் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார். 

அஸ்வின் தனது குடும்பத்தில் ஏதோ எமர்ஜென்சி என்று கூறி, ராஜ்கோட்டில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். 

பிசிசிஐ சொன்னது என்ன..? 

சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முழுமையாக விளையாடமாட்டார் என கூறப்பட்டது. இதையடுத்து, அஸ்வின் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்து கொண்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், குடும்ப நெருக்கடி காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், அணியும் அஸ்வினுக்கு முடு ஆதரவை தரும். பிசிசிஐ மற்றும் அணி அஸ்வினுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என தெரிவித்திருந்தார். 

500 விக்கெட்களை தனது தந்தைக்கு அர்ப்பணித்த அஸ்வின்: 

ராஜ்கோட் டெஸ்டின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் குரோலியை அவுட் செய்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை பூர்த்தி செய்தார். இந்த சாதனைக்கு பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின், "இது மிக நீண்ட பயணம். எனது 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என் தந்தை எனக்கு ஆதரவாகவே இருந்தார். என் அப்பாவால்தான் நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்க முடிந்தது. எனது தந்தையின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இருப்பினும், எனது பந்துவீசுவதை அவர் கண்டிப்பாகப் பார்ப்பார் என நம்புகிறேன். அவர் இப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்” என பேசினார். 

விராட் கோலிக்கு அடுத்த அஸ்வின்: 

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விலகிய முதல் வீரர் அஸ்வின் அல்ல. இவருக்கு முன், தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். இந்த இரண்டு வீரர்கள் இல்லாதது, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகப்பெரிய சிக்கலை இந்திய அணிக்கு கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. 

ராஜ்கோட் சோதனையில் இதுவரை என்ன நடந்தது?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்தியாவின் 445 ரன்களுக்கு பதிலடியாக, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 8 ரன்களுடனும் கிரீஸில் உள்ளனர். அதேசமயம், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget