மேலும் அறிய

IND vs ENG: இந்திய அணிக்கு பெரும் சிக்கல்! ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்ன காரணம்?

ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முழுமையாக விளையாடமாட்டார் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ராஜ்கோட்டில் நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், ரவிசந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். இருப்பினும், இந்த சாதனைக்கு பிறகு, அஸ்வின் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார். 

அஸ்வின் தனது குடும்பத்தில் ஏதோ எமர்ஜென்சி என்று கூறி, ராஜ்கோட்டில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். 

பிசிசிஐ சொன்னது என்ன..? 

சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முழுமையாக விளையாடமாட்டார் என கூறப்பட்டது. இதையடுத்து, அஸ்வின் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்து கொண்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், குடும்ப நெருக்கடி காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், அணியும் அஸ்வினுக்கு முடு ஆதரவை தரும். பிசிசிஐ மற்றும் அணி அஸ்வினுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என தெரிவித்திருந்தார். 

500 விக்கெட்களை தனது தந்தைக்கு அர்ப்பணித்த அஸ்வின்: 

ராஜ்கோட் டெஸ்டின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் குரோலியை அவுட் செய்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை பூர்த்தி செய்தார். இந்த சாதனைக்கு பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின், "இது மிக நீண்ட பயணம். எனது 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என் தந்தை எனக்கு ஆதரவாகவே இருந்தார். என் அப்பாவால்தான் நான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்க முடிந்தது. எனது தந்தையின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இருப்பினும், எனது பந்துவீசுவதை அவர் கண்டிப்பாகப் பார்ப்பார் என நம்புகிறேன். அவர் இப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்” என பேசினார். 

விராட் கோலிக்கு அடுத்த அஸ்வின்: 

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விலகிய முதல் வீரர் அஸ்வின் அல்ல. இவருக்கு முன், தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். இந்த இரண்டு வீரர்கள் இல்லாதது, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகப்பெரிய சிக்கலை இந்திய அணிக்கு கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. 

ராஜ்கோட் சோதனையில் இதுவரை என்ன நடந்தது?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்தியாவின் 445 ரன்களுக்கு பதிலடியாக, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 8 ரன்களுடனும் கிரீஸில் உள்ளனர். அதேசமயம், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget