மேலும் அறிய

Vastu Tips: வீட்டில் இந்த 5 இடங்கள்.. மயில் இறகுகளை வைத்தால் செல்வ மழை தான்!

மயில்கள் ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவை தமிழ் கடவுளான முருகப்பெருமானின் வாகனமாக அறியப்படுகிறது. இத்தகைய மயிலின் இறகுகள் அதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வாஸ்து விதிகள் மனித வாழ்க்கையில் ஒன்றிணைந்த ஒன்றாக மாறியுள்ளது. நிலம் சார்ந்த வாஸ்து விதிகளை நாம் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு பரிணாமங்களை நாம் அடையலாம் என நம்பப்படுகிறது. அதனால் தான் ஒரு வீடு, அலுவலகம் புதிதாக செல்லும்போது நாம் வாஸ்து விதிகளை கவனமாக கையாள்கிறோம். 

இப்படியான நிலையில் மயில்கள் ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவை தமிழ் கடவுளான முருகப்பெருமானின் வாகனமாக அறியப்படுகிறது. இத்தகைய மயிலின் இறகுகள் அதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வசீகரத்தின் அம்சமாக இருக்கும் மயில் இறகுகள் செல்வம், அழகு மற்றும் நேர்மறை ஆற்றலின் அம்சமாக கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மயில் இறகுகள் பாதுகாப்பு, செல்வம், நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இதனை வீடு அல்லது அலுவலகத்தில் சரியான இடத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்துக் கொள்வோம். 

வீட்டு ஹால் 

குடும்பத்தின் வாஸ்து குறைபாடு இருந்தால் அடிக்கடி உடல்நல பாதிப்பு, பண பிரச்னை, கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். எனவே அமைதியான மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான சூழல் உண்டாக வேண்டுமெனில் வீட்டு ஹாலில் நாம் மயில் இறகுகளை காட்சிப்படுத்த வேண்டும். இது மகிழ்ச்சியை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் நேர்மறையான எண்ணங்களைப் பரப்பும் என நம்பப்படுகிறது. 

படுக்கையறை 

கணவன், மனைவி இடையே இல்வாழ்க்கை சிறப்பாக அமைய, மயில் இறகுகளை படுக்கையறையில் வைக்கலாம். இது தனிப்பட்ட வாழ்க்கையில் அன்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை உண்டாக்கி மகிழ்ச்சியை அதிகரிக்கும். 

தோட்டம் அல்லது பால்கனி 

உங்களுடைய வீட்டின் தோட்டம் அல்லது பால்கனி பகுதியில் மயில் இறகுகளை வைத்தால் அழகும் அமைதியும் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகமாகும். இது வளர்ச்சி, செழிப்பை கொடுக்கும்.

பணம் புழங்கும் இடம் 

மயிலிறகுகளை நீங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கட்டி வைக்கவும். குபேர பகவான் இதனால் ஈர்க்கப்பட்டு செல்வத்தைப் பாதுகாப்பதோடு தேவையற்ற செலவுகளையும் தடுக்கிறது. உங்களின் வருமானமும் அதிகரிக்கிறது. அப்படி நீங்கள் வைத்தால் அதனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த மயில் இறகுகள் வீட்டில் செல்வத்தை நிரப்புவதாக நம்பப்படுகிறது. 

வீட்டின் நுழைவு வாயில் 

ஒரு இடத்தின் செழிப்பை அதிகரிக்கவும், அதனுள் நுழையும் எதிர்மறை சக்திகளைத் தடுக்கவும் நுழைவாயிலுக்கு அருகில் மயில் இறகை வைக்கவும். இது நேர்மறை எண்ணங்களை ஈர்க்கும் என்றும், அந்த இடத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது.

மயில் இறகுகளை நீங்கள் வைப்பதாக இருந்தால் அதனை ஒற்றைப்படை எண்ணில் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டு சேதமடைந்த அல்லது அழுக்கான மயில் இறகுகளை வைக்க வேண்டாம். சுத்தம் செய்யும் தரையில் வைக்காமல் ஏதேனும் ஒரு துணியில் வைக்க வேண்டும். இவை யாவும் இருந்தால் உங்களுக்கு குபேரனனி ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும். 

(ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திரம் நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு பொறுப்பேற்காது)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruchendur Murugan Temple: சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. எப்போது தெரியுமா?
Tiruchendur Murugan Temple: சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. எப்போது தெரியுமா?
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
காசிக்கு நிகரான புண்ணிய தீர்த்தம்! ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு...! 
காசிக்கு நிகரான புண்ணிய தீர்த்தம்! ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு...! 
திருப்பரங்குன்றத்தில் வாக்குவாதத்திற்கு பின் தொழுகை... ஏராளமான இஸ்லாமியர்கள் ரம்ஜான் வழிபாடு !
திருப்பரங்குன்றத்தில் வாக்குவாதத்திற்கு பின் தொழுகை... ஏராளமான இஸ்லாமியர்கள் ரம்ஜான் வழிபாடு !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Embed widget