மேலும் அறிய

குழந்தை வரம் அருளும் சுயம்பு ஸ்ரீ பூரணி புஷ்பகரணி காளியம்மன் - கற்பூரம் ஏந்தி தம்பதினர் வழிபாடு

திருவண்ணாமலை அருகே குழந்தை வரம் அருளும் சுயம்பு ஸ்ரீ பூரணி புஷ்பகரணி காளியம்மன் திருக்கோவிலில் கற்பூரம் ஏந்தி வழிபாடு குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து தம்பதியினருக்கு பிரசாதம்

திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீபூரணி புஷ்பகரணி காளியம்மன் திருக்கோவில். குழந்தை வரம் அருளும் இத்திருக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாள் அன்று அன்னதான அபிஷேக விழா விமர்சையாக நடைபெறும். அதன்படி சித்திரை திருநாளான நேற்று திருக்கோவில் நடை திறக்கப்பட்டு உற்சவர் மற்றும் மூலவர்களான ஸ்ரீ பூரணி புஷ்பகரணி காளியம்மனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுக்கப்பட்டு கற்கள் பதித்த ஆபரணங்களோடு கையில் திரிசூலத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

 


குழந்தை வரம் அருளும் சுயம்பு ஸ்ரீ பூரணி புஷ்பகரணி காளியம்மன் - கற்பூரம் ஏந்தி தம்பதினர் வழிபாடு

 

அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீயில் கருகுவதை உணர்த்தும் வகையில் திருக்கோவில் பூசாரி குணசேகரன் சாமிகள் 2 1/4 கிலோ எடையுள்ள கற்பூரத்தை கையில் ஏந்தி திருக்கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்த பின் மூலவருக்கும் உற்சவருக்கும் பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. குழந்தை வரம் வேண்டி காலை முதல் விரதம் இருந்து திருக்கோவிலுக்குள் வந்திருந்த தம்பதியினருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாக பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும். கோவிலின் பின்புறம் சிவனே மலையாக காட்சி தரும் மலையாக உள்ளது. மலையை சுற்றிலும் கிரிவலப் பாதை அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாள் அன்று சூரிய பகவான் அண்ணாமலையார் மீது பட்டு வழிபடுவது வழக்கம். இந்த அபூர்வமான நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர தரிசிப்பர்.

 


குழந்தை வரம் அருளும் சுயம்பு ஸ்ரீ பூரணி புஷ்பகரணி காளியம்மன் - கற்பூரம் ஏந்தி தம்பதினர் வழிபாடு

அதன்படி சித்திரை திருநாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு திருநேர் அண்ணாமலையாருக்கு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகள் நடைபெற்றுது. திருநேர் அண்ணாமலையாருக்கு பல்வேறு சிறப்பு வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சரியாக அதிகாலை 7 மணிக்கு தீப மலையின் உச்சியில் காட்சி கொடுத்த சூரிய பகவான் திருநேர் அண்ணாமலையார் மீது பட்டு, சூரிய பகவான் திருநேர் அண்ணாமலையாரை வழிபட்டார். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வினை நீண்ட நேரமாக ஆன்மீக பக்தர்கள் காத்திருந்து திருநேர் அண்ணாமலையாரையும், சூரிய பகவானையும் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு ஒரு சேர சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget