மேலும் அறிய

Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்பவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

உலகின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்து காணப்படுவார்கள்.

விஐபி பிரேக் தரிசனம்:

திருப்பதியில் பொது தரிசனம் உள்பட சாமி தரிசனத்திற்கு பல்வேறு வகைகள் உள்ளது. அதில் விஐபி பிரேக் தரிசனம் மிக மிக முக்கியமானது ஆகும். இந்த நிலையில், விஐபி பிரேக் தரிசனத்தில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.

திருப்பதியில் கடந்த 2008ம் ஆண்டு அனந்த ஸ்வர்ணமயம் என்ற திட்டம் அமலில் இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு பொது விஐபி ப்ரேக் தரிசனம் மூலம் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தங்கக்காசு:

இதன்படி, திருப்பதி கோயிலுக்கு நன்கொடை வழங்குபவர்கள் 3 நாட்கள் வரை அறைகளில் தங்க அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 கட்டணமாக நிர்ணயிக்கப்படும். மேலும், ஆண்டுக்கு மூன்று நாட்கள், நன்கொடையாளரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் அதிகபட்சமாக 5 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு ஒரு முறை 20 சிறிய லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். நன்கொடையாளர்கள் முதன்முறையாக தரிசனத்திற்கு வரும்போது 5 கிராம் தங்க டாலர்கள், 50 கிராம் வெள்ளி டாலர் பரிசாக வழங்கப்படும். இவர்கள் தரிசனம் செய்த பிறகு வருடத்திற்கு ஒரு முறை உத்தரியம், ரவிக்கை துணி வழங்கப்படும்.

25 வருடங்கள் செல்லும் பாஸ்புக்:

வருடத்திற்கு ஒரு முறை 10 மகா பிரசாதம் பாக்கெட்டுகள் இவர்களுக்கு வழங்கப்படும். நன்கொடையாளர்கள் நன்கொடை வழங்கிய நாளில் இருந்து 25 வருடங்களுக்குச் செல்லுபடியாகும் நன்கொடை பாஸ்புக் ஒன்று வழங்கப்படும். இந்த புத்தகத்தில் அவர்கள் வழங்கப்படும் நன்கொடைகள் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும்.

திருப்பதிக்கு உண்டியலில் மட்டும் தினசரி லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கையாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கோடிக்கணக்கான ரூபாயில் பக்தர்கள் சிலர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

தலைப்பு செய்திகள்

கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Embed widget