மேலும் அறிய

Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயிலில் அதிசயம்! 15 ஆண்டுக்கு பின்னர் இறக்கப்பட்ட கும்பக்கலசம்; கெட்டு போகாத நவதானியம் - ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

கோபுர கலசத்துக்குள் இருந்த வரகு, தானியம் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் அனைவரும் பரவசமும் ஆச்சரியமும் அடைந்தனர்.

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகளுக்காக  ராஜகோபுரத்தில் இருந்து  கீழே இறக்கப்பட்ட 9 கலசங்களில் நவதானியங்கள் தன்மை மாறாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் தொடங்கி   நடைபெற்று வருகின்றன.  கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த பணிகளில் விடுதிகள், அன்னதான மண்டபம், பூங்கா, கிரிபிராக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையான கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த  2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.  


Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயிலில் அதிசயம்! 15 ஆண்டுக்கு பின்னர் இறக்கப்பட்ட கும்பக்கலசம்; கெட்டு போகாத நவதானியம் - ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

அதனைத்தொடர்ந்து  137 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ராஜகோபுரத்தில் உள்ள ஒன்பது கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக் கலசங்களில் உள்ள பழைய நவதானியங்கள் மாற்றப்படுவதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு கோபுரத்திலிருந்து கலசம் கழற்றி பாதுகாப்பாக  கீழே கொண்டு வரப்பட்டது. அப்போது கோபுர கலசத்துக்குள் இருந்த வரகு, தானியம் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் அனைவரும் பரவசமும் ஆச்சரியமும் அடைந்தனர்.


Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயிலில் அதிசயம்! 15 ஆண்டுக்கு பின்னர் இறக்கப்பட்ட கும்பக்கலசம்; கெட்டு போகாத நவதானியம் - ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

இதற்கு முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி 15 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget