மேலும் அறிய

புகழ்பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை.. திரளாக குவிந்த பெண்கள்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.


புகழ்பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை.. திரளாக குவிந்த பெண்கள்..!

திருவிளக்கு பூஜை:

தேவாரப்பாடல் பெற்றதும்  அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 588 திருவிளக்குகள் வைத்து தோஷங்கள் நீங்கிடவும், மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு, லட்சுமி கடாட்சத்துடன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி திருவிளக்கிற்கு மங்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் புஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் உள்ள அருள்மிகு கௌமாரி துர்க்காபரமேஸ்வரிக்கு 34ம் ஆண்டு திருவிளக்கு பூஜை. 

மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனை சௌந்தர நாயகி அம்பாள் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும், துர்காபரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டு அகோர வடிவிலிருந்து சௌந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும் விளங்குகிறது.


புகழ்பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை.. திரளாக குவிந்த பெண்கள்..!

இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் உள்ள கௌமாரி துர்க்காபரமேஸ்வரிக்கு 34-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் உலக நன்மை வேண்டியும், குடும்பம் சுபிட்சமடைய வேண்டியும், நடப்பாண்டு பருவமழை  வேண்டியும் 128 திருவிளக்குகள் வைத்து பெண்கள் பூஜை செய்தனர். திருவிளக்கிற்கு, குங்குமம் மற்றும் மலர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மகாராஜபுரம்அருள்மிகு நாகாத்தம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு பால் குடத் திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி மகாராஜபுரம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில். இங்கு ஆடி மாதத்தை ஒட்டி   பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜோதிடர் ஆலய அறங்காவலரும் தேமுதிக பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே.எஸ். கிருஷ்ணன் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் விரதம் இருந்து செம்பனார்கோவில் தாதா விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.


புகழ்பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் திருவிளக்கு பூஜை.. திரளாக குவிந்த பெண்கள்..!

தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு நாகாத்தமனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மகா தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பால்குட ஊர்வலத்தில் வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பச்ச காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி ஆட்டத்துடன் பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
Krishna Jayanthi 2026 Wishes: இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு உங்கள் அன்பானவர்களுக்கு அனுப்ப மனதை மயக்கும் வாழ்த்துகள் இதோ
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு உங்கள் அன்பானவர்களுக்கு அனுப்ப மனதை மயக்கும் வாழ்த்துகள் இதோ
விநாயகர் சதுர்த்தி 2026: அரசியல் மற்றும் சாதி ரீதியான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது !
விநாயகர் சதுர்த்தி 2026: அரசியல் மற்றும் சாதி ரீதியான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது !
டேனிஷ் கோட்டையிலிருந்து புறப்பட்ட 500 பால்குடங்கள்! தரங்கம்பாடியில் நடந்த சிலிர்க்க வைக்கும் பக்திப் பெருவிழா!
டேனிஷ் கோட்டையிலிருந்து புறப்பட்ட 500 பால்குடங்கள்! தரங்கம்பாடியில் நடந்த சிலிர்க்க வைக்கும் பக்திப் பெருவிழா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
Embed widget