மேலும் அறிய

Thiruppavai 5: மார்கழி 5ஆம் நாள்... 5வது பாடல்... தாய்க்கு பெருமை சேர்த்தவரை வணங்கினாலே... ஆண்டாள் சொல்வது என்ன?

Thiruppavai 5: சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள், தாய்க்கு செய்ய வேண்டிய கைம்மாறு குறித்து ஐந்தாவது பாடலில் தெரிவித்துள்ளார்

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.

திருப்பாவையின் 5வது பாடல் மூலம் ஆண்டாள் கூற வருவதை காணலாம்.

பாவங்கள் சாம்பலாகும்:

வியப்புக்குரிய செயல்களை செய்யக் கூடியவனை மாயோன் என அழைப்பர். வீட்டுக்கு உரியவனை மகன் என்றும், நாட்டுக்கே உரியவனை மைந்தன் என்றும் பெரியோர் அழைப்பர். 

எனவே மாயோனாகிய, மைந்தனாகிய, தூய நீரான யமுனை ஆற்றங்கரையில் பிறந்தவனாகிய, தாய்க்கு பெருமை சேர்த்தவனாகிய கண்ணனை வணங்கினால், இந்த ஜென்மத்தில் மட்டும் அல்லாது முன் உள் ஜென்மத்திலும் உள்ள பாவங்கள் யாவும், தீயில் எரிந்த சாம்பல் போல நீங்கி விடும் என ஆண்டாள் எடுத்துரைக்கிறார்.


Thiruppavai 5: மார்கழி 5ஆம் நாள்... 5வது பாடல்... தாய்க்கு பெருமை சேர்த்தவரை வணங்கினாலே... ஆண்டாள் சொல்வது என்ன?

இதே தன்மையை திருவள்ளுவர் சற்று வேறு வகையில் கையாளுகிறார். 

”மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்”

இக்குறள் மூலம், மகனை பெறுவதற்கு தந்தை என்ன தவம் செய்தாரோ என உணர்த்துகிறது. அதாவது, தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மகன் இருக்க வேண்டும் என உணர்த்துகிறார்.

ஆண்டாள், திருப்பாவையில் தாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் மகன் இருக்க வேண்டும் என உணர்த்துகிறார். ஆனால் இரண்டும் ஒரே உட்பொருளே குறிக்கிறது.

இப்பாடல் மூலம், வீட்டுக்கு உரிய மகனாக மட்டுமல்லாமல், ஊருக்கே நன்மை செய்யக்கூடிய மைந்தனாக இருக்க வேண்டும். தாயை நன்றாக கவனித்து கொண்டு, பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ளும் போது, எந்த துன்பமும் நெருங்காது என குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறார். தாயை மிஞ்சிய சக்தி ஏது.....

இப்பாடலில், கண்ணனை வைத்து,  அணிகலன்களான சொற்கள் வைத்து நயம்பட தமிழை ஆண்டாள் கையாண்டுள்ளார். 

திருப்பாவை 5வது பாசுரம்:

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
  தூய பெருநீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, 
  தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனை, 
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது, 
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
  தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

Also Read: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்..

Also Read: Margazhi 2022: மார்கழி முதல் நாள்.. முதல் பாடல்.. ஒரு கண்ணில் சூரியன், மறு கண்ணில் நிலவு... போற்றி பாடும் ஆண்டாள்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Breaking News LIVE:  கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
Breaking News LIVE: கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Breaking News LIVE:  கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
Breaking News LIVE: கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Embed widget