மேலும் அறிய

Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

கருடா செடியில் மலர் அதிகம் பூத்தால் வருடம் முழுவதும் செழிக்கும் அளவில் மழை இருக்கும், அதே நேரத்தில் மிக மிக அதிகமாக பூப்பூத்தால் மழையால் வெள்ளம் ஏற்படும்.

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது.


Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகம் அன்று தான் தாமிரபரணியை அகத்தியர் தனது கமண்டல நீரில் இருந்து பொதிகைமலையில் விட்டு நதியை ஓடச் செய்தார் என்று தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது. தாமிரபரணி நதி பரணி என போற்றபட்டாலும் வைகாசி விசாக நட்சத்திரத்தில் தோன்றியவள் என்ற கூற்றும் தாமிரபரணி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தான் வைகாசி விசாகம் தாமிரபரணி நதியில் பெருமையாகப் போற்றப்படுகிறது.


Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

இந்த நாளில் தான் குபேரன் தாமிரபரணி நதியில மூழ்கி தனது இழந்த பொருளை மீட்டார். நம்மாழ்வார் பிறந்தது இந்த தினத்தில் தான். முருகப்பெருமான் அவதாரமும் வைகாசி விசாகத்தில் தான் நடைபெறுகிறது. இந்தநாளில் தாமிரபணியில் எங்கு குளித்தாலும் 12 வருடத்துக்கு ஒரு முறை கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டுகிறது.இந்த பெருமை கொண்டு தாமிரபணிக்கு பிறந்த நாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் பல்வேறு பூஜை நடைபெறுகிறது. இந்த வருடம் மழை வேண்டியும் தாமிரபரணி கரையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 


Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு, நதிக்கு அபிசேகம் செய்து பூஜை நடந்தது. இதையட்டி தாமிரபரணி நதிக்கரை அருகே உள்ள முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் என்ற முகில் வண்ணநாதர், முக்குறுணி அரிசி பிள்ளையார், லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. அதன்பின் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் தாமிரபரணி பிறந்த நாளை முன்னிட்டு மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.  அதைத்தொடர்ந்து முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளைபெற்ற குணவதியம்மன் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. பின் கோவிலில் இருந்து கும்பம் எடுத்து ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு 21 வகையான அபிசேகங்கள் செய்து கும்பநீரும் ஊற்றி அபிசேகம் செய்யப்பட்டது. 


Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட மழை வேண்டி ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி தலைமை வகித்து பூஜைகளை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Thamirabarani River: தாமிரபரணி நதிக்கு இன்று பிறந்தநாள் - 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

பூங்குளத்தில் கருடா என்ற செடி உள்ளதாக கூறும் காணிகள் அதில் பூக்கும் மலரை வைத்து தான் அந்தந்த மழை அளவை தீர்மானிக்கின்றனர். கருடா செடியில் மலர் அதிகம் பூத்தால் வருடம் முழுவதும் செழிக்கும் அளவில் மழை இருக்கும், அதே நேரத்தில் மிக மிக அதிகமாக பூப்பூத்தால் மழையால் வெள்ளம் ஏற்படும் என்கின்றனர். அதே நேரத்தில் பூ பூக்கவில்லை என்றால் வறட்சி அதிகம் ஏற்படும் என்கின்றனர் காணிவாசிகள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget