மேலும் அறிய

Thaipusam 2024: சந்தன காவடி முதல் சர்ப்ப காவடி வரை! காவடியிலே இத்தனை வகைகளா? தெரிஞ்சிக்கோங்க!

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் பல வகையான காவடிகள் சுமந்து முருகப்பெருமான் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் ஆகும்.

முருகப் பெருமானுக்கு மிக உகந்த நாளான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் அலைகடலென குவிவது வழக்கம். முருகப் பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகள் மட்டுமின்றி மற்ற முருகப்பெருமான் ஆலயத்திலும் பக்தர்கள் குவிவது வழக்கம். தைப்பூசத்திற்காக முருக பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்திக்கடன் செல்வதும் வழக்கம் ஆகும். பல பக்தர்களும் காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.

காவடிகளிலே பல வகை காவடிகள் உண்டு. அவை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

தீர்த்த காவடி:

கரூர் மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் இருந்து புனித நீராக கருதப்படும் காவிரியில் இருந்து பக்தர்களால் பாத யாத்திரையாக முருகன் கோயில்களுக்கு கொண்டு வரப்படும் தீர்த்தம் காவிரி தீர்த்தம் ஆகும். சிலர் அவரவர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தீர்த்தத்தை முருகன் கோயிலுக்கு கொண்டு செல்வார்கள்.

பறவை காவடி:

காவடிகளில் மிகவும் பிரபலமான காவடி பறவை காவடி ஆகும். முருகனை நினைத்து அலகு குத்தி ஆகாயத்தில் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் வருவது பறவை காவடி ஆகும்.

மயில் காவடி:

முருகப்பெருமானின் வாகனமாக கருதப்படுவது மயில். மயிலின் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் சுமந்து வருவதே மயில் காவடி ஆகும்.

பால் காவடி:

முருக பக்தர்களால் காவடிகளில் அதிகளவு எடுக்கப்படும் காவடி பால்காவடி ஆகும். ஒரு செம்பில் அல்லது கலசம் போன்ற குடத்தில் பாலை எடுத்து தலையில் வைத்து பாத யாத்திரையாக செல்வார்கள்.

சந்தன காவடி:

உடல் முழுவதும் சந்தனத்தை பூசி காவடி எடுத்து வருதல் சந்தன காவடி ஆகும்.

வேல் காவடி:

உடலில் ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது உடல் முழுவதும் பெரிய அளவிலோ, சிறய அளவிலோ வேல் குத்தி நேர்த்திக்கடன் செல்வதே வேல் காவடி ஆகும்.

அன்னக்காவடி:

அன்னம் என்றால் உணவு. காவடியில் உணவு கட்டிகொண்டு வந்து இறைவனுக்கு படைக்கப்படும் காவடியே அன்னக்காவடி ஆகும். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக பக்தர்கள் அன்னக்காவடி எடுக்கின்றனர்.

சர்ப்பகாவடி:

முருகனுக்கு எடுக்கப்படும் காவடிகளில் ஒன்று சர்ப்பகாவடி. பாம்பை ஒரு பெட்டியில் உப்பு போட்டு அடைத்து, அதை காவடியுடன் சேர்த்து முருகன் கோயிலுக்கு கொண்டு செல்லும் காவடியே சர்ப்பகாவடி ஆகும். முன்பு அடிக்கடி எடுத்து வரப்பட்ட சர்ப்ப காவடி, தற்போது குறைந்த அளவே கொண்வு வரப்படுகிறது.

அக்னி காவடி:

அக்னி காவடி என்பது பெரும்பாலான பக்தர்கள் எடுக்கும் காவடி ஆகும். உடலில் அலகு குத்தி அந்த அலகில் பூச்சட்டி ( தீச்சட்டி) ஏந்தி உலா வருவது அக்னி காவடி ஆகும். இந்த அக்னிச்சட்டியில் வைக்கப்படும் அக்னிச்சட்டிகளின் எண்ணிக்கை மாறும். சிலர் 108 அக்னிசட்டிகள் ஏந்தி வருவார்கள்.

இளநீர் காவடி:

முருகனுக்கு எடுக்கப்படும் காவடிகளில் மற்றொரு காவடி இளநீர் காவடி ஆகும். தென்னை மரத்தில் இருந்து இளநீர் பறித்துக் கொள்வார்கள். தென்னை மரத்தில் இருந்து பச்சை மட்டை ஒன்றையும் பறித்துக் கொள்வார்கள். அந்த பச்சை மட்டையை ஒரு காவடியின் கைப்பிடி போல உருவாக்குவார்கள். மொத்தம் நான்கு இளநீர் பறித்துக் கொள்வார்கள். இரண்டு இளநீர்களை ஒரு புறமும், மற்ற இரண்டு இளநீர்களை மற்றொரு புறமும் கட்டிக்கொண்டு காவடியாக சுமந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

புஷ்ப காவடி:

பெரும்பாலான பக்தர்கள் எடுக்கும் காவடிகளில் புஷ்ப காவடியும் ஒன்றாகும். காவடி நடுவில் முருகப்பெருமான் திருவுருவப் படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து கோயில்களுக்கு சுமந்து செல்வார்கள். இதுவே புஷ்ப காவடி ஆகும். இந்த காவடி வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும்.

இதுபோன்று பல வகையான காவடிகள் தைப்பூச திருநாளில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக சுமந்து முருகன் கோயில்களுக்கு கொண்டு செல்லப்படும்.

தலைப்பு செய்திகள்

ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
கடன் தொல்லையா? ஒரே ஒரு தடவை இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க.. அப்புறம் பாருங்க
கடன் தொல்லையா? ஒரே ஒரு தடவை இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க.. அப்புறம் பாருங்க

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
Embed widget