மேலும் அறிய

அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்

தை மாத முகூர்த்தம் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்குள் 3 முகூர்த்தம் வருவதால் தமிழ்நாடு முழுவதும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

தை மாதம் என்றாலே பொங்கல் மட்டுமின்றி அந்த மாதத்தில் வரும் முகூர்த்த நாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனென்றால்,  மார்கழி மாதத்தில் பொதுவாக திருமணம் உள்ளிட்ட எந்த காரியங்களும் நடத்தப்படுவது இல்லை. இதனால், அடுத்து வரும் தை மாதத்தில் வரும் முகூர்த்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். 

அடுத்தடுத்து முகூர்த்தம்:

ஏனென்றால் மார்கழி மாதத்தில் சுபகாரியங்கள் நடத்தாத பலரும் தை மாதத்தில் வரும் முகூர்த்த நாளிலே சுபகாரியங்களை நடத்துவார்கள். மேலும், தமிழ் மாதத்தின் முதல் மாதமான தையில் சுபகாரியங்களை செய்வதையும் சிறப்பு வாய்ந்ததாக கருதுவார்கள். 

இந்த தை மாதத்தின் வளர்பிறை முகூர்த்தமாக ஜனவரி 31, பிப்ரவரி 2 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகள் வருகிறது. அதாவது, நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் திங்கள்கிழமை முக்கிய முகூர்த்த நாள் ஆகும். மார்கழி முடிந்து வரும் முகூர்த்த நாள் என்பதாலும், நான்கே நாட்களுக்குள் 3 முகூர்த்த நாட்களாக வருவதாலும் இந்த தினங்களில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான திருமணங்களும், புதுமனை புகுவிழா, காது குத்து விழா, வீடு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

களைகட்டும் கல்யாண ஏற்பாடுகள்:

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன், பெருமாள், முருகன், விநாயகர்,  அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற உள்ளது. அரசு நிர்வகிக்கும் சமுதாய கூடங்கள், தனியார் திருமண மண்டபங்களும் ஏற்கனவே இந்த முகூர்த்த நாளில் முன்பதிவாகிவிட்டது. 

முகூர்த்த நாட்கள் என்பதால் சென்னை உள்பட பெரு நகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வருகிறது. பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணிகள் ஏற்கனவே ஆயிரக்கணக்கில் முன்பதிவு செய்துள்ளனர். 

காய்கறிகள், பூக்கள், பழங்கள் வரத்து உயர்வு:

அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் பெருநகரங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய காய்கனி சந்தைகளில் காய்கறிகள் வரத்து வழக்கத்தை விட அதிகளவு உள்ளது. ஆப்பிள், ஆரஞ்ச் உள்ளிட்ட பழங்களின் வரத்தும் சந்தைகளில் அதிகளவு உள்ளது. 

மேலும் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. மல்லி, கதம்பம், ரோஜா உள்ளிட்ட பூக்களின் வரத்து வழக்கத்தை விட அதிகளவு பூக்கள் சந்தையில் காணப்படுகிறது. மேலும்,. மாலைகள் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. 

பத்திரப்பதிவு அலுவலகங்கள்: 

அடுத்த 4 நாட்கள் தொடர் முகூர்த்தம் என்பதால் அடுத்த நான்கு நாட்கள் மக்கள் பரபரப்பாகவே காணப்படுவார்கள். மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள்  இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும், முகூர்த்த நாட்கள் என்பதால் பத்திரப்பதிவு அலுவகங்களில் பத்திரங்கள் பதியவும் மக்கள் வழக்கத்தை விட அதிகளவு காணப்படுவார்கள். 

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
மானாமதுரை மண்பாண்ட விநாயகர்: புதிய வடிவங்கள், சுற்றுச்சூழல் காக்கும் சிலைகள்!
varalakshmi vratham 2026: உறவினர்கள், நண்பர்களுக்கு சொல்ல வேண்டிய ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி விரதம் வாழ்த்துக்களும், மந்திரங்களும்!
உறவினர்கள், நண்பர்களுக்கு சொல்ல வேண்டிய ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி விரதம் வாழ்த்துக்களும், மந்திரங்களும்!
கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்
கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை: வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - முழு விவரங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget