மேலும் அறிய

தருமபுரி: கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு தீர்த்த குடம், முளைப்பாரிகளை எடுத்துச் சென்ற பெண்கள்

கிராமத்தில் உள்ள பெண்கள் 300க்கும் மேற்பட்டோர், கோபுர கலசத்திற்கு ஊற்ற தீர்த்த குடம், முளைப்பாரியை ஊர்வலமாக, வானவேடிக்கையுடன், மேல தாளங்கள் முழங்க கோயிலுக்கு சென்றனர்.

தருமபுரி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரிகளை எடுத்துச் சென்றனர். 
 
தருமபுரி மாவட்டம் பெரிய குரும்பட்டி, மாதுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக ஸ்ரீ காளியம்மன் கோயிலை பிரம்மாண்டமாக கட்டியுள்ளனர். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக இரண்டு கிராமத்தில் உள்ள ஏராளமான மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த சில நாட்களாக விரதம் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாயபெருமாள், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீதுவார சக்தி ஆகிய தெய்வங்களின் நூதன ஆலய பிம்ப அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி ஸ்ரீகணபதி பூஜையுடன் துவங்கியது.  இன்று கிராமத்தில் உள்ள பெண்கள் 300க்கும் மேற்பட்டோர், கோபுர கலசத்திற்கு ஊற்ற தீர்த்த குடம், முளைப்பாரியை ஊர்வலமாக, வானவேடிக்கையுடன், மேல தாளங்கள் முழங்க கோயிலுக்கு சென்றனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக கிராம மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்களை கோயிலில் ஊற்றி முளைப்பாரிகளை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் புதிய சிலைகள் கரிக்கோலம் வருதலும், தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. பின் புதிய சுவாமிகள் ஊர்வலமும் நடந்தது.  25ம் தேதி முதல் கால யாகபூஜையும், பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடக்கிறது. இதனை தொடர்ந்து வரும் 27ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

தருமபுரி: கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு தீர்த்த குடம்,  முளைப்பாரிகளை எடுத்துச் சென்ற பெண்கள்
 
இந்த நிகழ்ச்சியில் இரண்டு கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது ஒவ்வொரு சில பெண்கள் ஆண்களுக்கு சாமி வந்து ஆடினார் அப்பொழுது அருள்வாக்கும் கூறினர். இதில் கோயிலை சிறப்பாக கட்டி திருவிழா எடுக்கின்ற மக்களை பாதுகாப்பேன் என்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பக்தர் ஒருவர் அருள் வாக்கு தெரிவித்தார். மேலும் கோயில் அருகில் 2000 மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
Crime: கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
Embed widget