மேலும் அறிய

தஞ்சாவூரில் கந்த சஷ்டி: சூரசம்ஹாரம் கோலாகலம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! திருக்கல்யாண வைபவம்!

கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வள்ளி தேவசேனா, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் சூரசம்ஹாரம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தஞ்சாவூர் பூச்சந்தை அருகில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் முருகன் என்று அழைக்கப்படும் பூக்காரத்தெரு அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடப்பது வழக்கம்,  அதேபோல் இந்தாண்டும் கந்த சஷ்டி திருவிழாவின் கடைசி நாளான நேற்று சூரனை சண்முகர்  வதம் செய்யும் காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது, 


தஞ்சாவூரில் கந்த சஷ்டி: சூரசம்ஹாரம் கோலாகலம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! திருக்கல்யாண வைபவம்!

இதை முன்னிட்டு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்குகளில் எழுந்தருளி அரக்கனை நேர் எதிரே சந்தித்து சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அப்போது சுவாமிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

சஷ்டியின் 6ம் நாளான நேற்று 27ம் தேதி இரவு தஞ்சை பூக்கார தெருவில் எழுந்தருளி இருக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையாக போற்றப்படும் இக்கோயில் பிரகாரத்தில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கோயிலில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் முடிந்த உடன் 6 நாள் விரதம் மேற்கொண்டு இருந்தவர்கள் பானகம் பருகி தங்களின் விரதத்தை முடித்து கொண்டனர். 


சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்றிரவு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மாலை தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்கி, கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்தார். இதையடுத்து தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்த சூரசம்கார நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.

அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். பக்தர்களின் விண்ணதிரும் கோஷத்திற்கு மத்தியில் சூரசம்கார நிகழ்வு நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார நிகழ்வை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தஞ்சாவூரில் கந்த சஷ்டி: சூரசம்ஹாரம் கோலாகலம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! திருக்கல்யாண வைபவம்!

திருக்கல்யாண வைபவம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் ஸ்ரீ  சௌந்தரநாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வள்ளி தேவசேனா, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்பூலங்கள் எடுத்து கோயிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள் நடத்தப்பட்டது. பின்னர் அக்னி ஹோமங்கள் வார்க்கப்பட்டு  ஆகமவிதிகள்படி சுவாமி சுப்பிரமணிய சுவாமிக்கும் அம்பாள் வள்ளி தேவசேனாவுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்து, சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர், அறங்காவலர் குழுவினர் கிராம முக்கியஸ்தர்கள், மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"கல்லில் ஆடிய நர்த்தனம்: சோழர் கால சிற்பிகளின் வியக்கவைக்கும் உளி வீச்சு!" எங்கு தெரியுங்களா?
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
பேரையூர் நாகநாதர் கோயில்: பக்தர்களின் சொர்க்கம்; சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தலம்
வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
வேண்டுவோருக்கு வரம் தரும் அன்னை! தத்தங்குடியில் பிரம்மாண்ட பால்குடத் திருவிழா - பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!
குழந்தை சிரிப்பு கனவாக இருந்தால்… தர்ம சாஸ்தா அருளால் நனவாகும்
குழந்தை சிரிப்பு கனவாக இருந்தால்… தர்ம சாஸ்தா அருளால் நனவாகும்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
CBSE 12th Result 2026: ஒருவழியாக… சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
CBSE 12th Result 2026: ஒருவழியாக… சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Southwest Monsoon: அக்னி நட்சத்திரம் முடியும் முன் மழை - மே 16-ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை; லேட்டஸ்ட் தகவல்
அக்னி நட்சத்திரம் முடியும் முன் மழை - மே 16-ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை; லேட்டஸ்ட் தகவல்
Stalin vs VIJAY : இது தூய சக்தியா இல்ல... அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? தவெகவை இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
இது தூய சக்தியா இல்ல... அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா? தவெகவை இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Embed widget