Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
Panguni Uthiram 2026: பங்குனி உத்திரம் நன்னாளில் கோயிலில் வழிபட வேண்டிய நேரம் என்ன? வழிபட வேண்டிய முறை எப்படி? என்பதை கீழே காணலாம்.

பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளும் உத்திரம் நட்சத்திரம் சேரும் நாளே பங்குனி உத்திரம் எனப்படுகிறது. இந்த நாள் இந்து சமயத்தில் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக முருகன், பார்வதி – சிவன், ஆண்டாள் – ரங்கநாதர் ஆகிய தெய்வங்களின் திவ்ய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஏப்ரல் 1ம் தேதி காலை 7.45மணிக்கு மேல் தெய்வ வழிபாடு ஆரம்பித்து மாலை 4.20 வரை சிறப்பாக வழிபாடு செய்ய செய்ய உகந்த நேரம் ஆகும்.
திருமணம்:
இந்த நாளில் தெய்வங்களுக்கு திருமண விழா நடத்துவது மிக முக்கியமான வழிபாடாகும். தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். குறிப்பாக பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவம்:
தம்பதியரின் ஒற்றுமை மற்றும் குடும்ப நல்லிணக்கம் அதிகரிக்கும்
திருமணத் தடை நீங்கும்
மன அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சி கிடைக்கும்
புண்ணிய பலன் அதிகரிக்கும்
இந்த நாளில் விரதம் இருந்து, கோயிலுக்கு சென்று தெய்வங்களை வழிபடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக முருகன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வழிபடுவது எப்படி?
காலை சுத்தமாக குளித்து விரதம் இருக்க வேண்டும்.
சிவன் மற்றும் முருகன் கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும்.
பால், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.
திருமண தடை உள்ளவர்கள் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யலாம்.
புனித நாள்:
மேலும், இந்த நாளில் “ஓம் சரவணபவா” அல்லது “ஓம் நமசிவாய” எனும் மந்திரங்களை ஜபிப்பது நல்ல பலனை தரும். முடிவாக, பங்குனி உத்திரம் என்பது ஆன்மிக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் மிகுந்த நன்மைகளை தரும் புனித நாள். இந்த நாளில் பக்தியுடன் வழிபட்டால் வாழ்க்கையில் அமைதி, வளம் மற்றும் நலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமையே பல கோயில்களில் கொடியேற்றப்பட்டுவிட்டது.
பங்குனி உத்திரம் நன்னாளில் முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அறுபடை வீடுகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் என்பதால் அங்கும் பக்தர்கள் வழிபாட்டிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வைணவ தலங்களிலும் பங்குனி உத்திர வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.























