மேலும் அறிய

New Year 2024: புனித அந்தோணியார் ஆலயத்தில் தீச்சட்டி ஏந்தி அங்கப்பிரதட்சணம் செய்த பக்தர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில், சர்ச்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 

ஆங்கில புத்தாண்டான 2024 -ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோயில்களில் மக்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்காக அலை மோதினார்கள். பல்வேறு கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புத்தாண்டில் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே கோயிலில் பக்தர்கள் திரண்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இந்தாண்டு தங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேற மனமுருகி வேண்டிக் கொண்டனர்.


New Year 2024: புனித அந்தோணியார் ஆலயத்தில் தீச்சட்டி ஏந்தி அங்கப்பிரதட்சணம் செய்த பக்தர்கள்

அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றியம் மேலையூரை அடுத்த கஞ்சாநகரம் கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நோய் தீர வேண்டியும், வேண்டிய காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் 51 ஆண்டுகளாக பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து மத வழிபாடு போன்று அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு அங்கப் பிரதட்சணம் செய்தும், முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தி தீபம் அணையாமல் ஆலயம் வரை முட்டியால் நடந்தும், தீச்சட்டிகளை கையில் ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு ஆண்டும் பிறந்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் நூதன முறையில் வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.

புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை அத்தி வரதர் எனப்படும் கோழி குத்தி வானமுட்டி பெருமாள் ஆலயத்தில், சுவாமிக்கு சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் கோழிகுத்தி என்ற இடத்தில் மிகப் பழமை வாய்ந்த 16 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் செய்யப்பட்ட வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையின் அத்திவரதர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது.


New Year 2024: புனித அந்தோணியார் ஆலயத்தில் தீச்சட்டி ஏந்தி அங்கப்பிரதட்சணம் செய்த பக்தர்கள்

மேலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுபோல் மயிலாடுதுறை நகரில் புகழ்பெற்ற வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு தங்க காப்பும், உற்சவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு கோயில்களில் குடும்பத்தினருடன் பொதுமக்கள் சாமி தரிசனம்.

ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்துள்ளது முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர். புத்தாண்டு யொட்டி பலர் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆதி வைத்தியநாத சுவாமி, வைத்தியநாதர்- தையல்நாயகி அம்மன் , கற்பக விநாயகர், செல்வமுத்துக்குமார சுவாமி, ஆகிய அம்மன் அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் நெய் தீபங்கள் ஏற்றியும், தங்களது குடும்பங்களின் பெயர்களில் அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டு செல்கின்றனர். 


New Year 2024: புனித அந்தோணியார் ஆலயத்தில் தீச்சட்டி ஏந்தி அங்கப்பிரதட்சணம் செய்த பக்தர்கள்

இதேபோல் சீர்காழி அருகே உள்ள புதன் ஸ்தலமான பிர்ம்ம வித்யாம்பியகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயிலிலும் ஆங்கில புத்தாண்டு ஒட்டி காலை முதலே பக்தர்கள் கூட்டமும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் என அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் உள்ள முக்குளங்களில் சில பக்தர்கள் நீராடி சுவாமிகளை தரிசனம் செய்து செல்கின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
EV Car Battery: 15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
15 வருட பேட்டரி வாரண்டி, ரேஞ்ச்? இந்தியாவின் நம்பகமான டாப் 5 மின்சார கார்கள் - விலை எப்படி?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget