மேலும் அறிய

Maha Shivaratri 2023: மகா சிவராத்திரி... சேலத்தில் 3 ஆயிரம் தேங்காய்களை கொண்டு சிவன் சிலை

மகா சிவராத்திரியொட்டி 50 பெண்கள் ஒன்றினைந்து ஒரே இரவில் 3000 தேங்காய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிவலிங்கம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா சேவா சபா மற்றும் யுகாதி நண்பர்கள் குழுவினர் இணைந்து 7வது ஆண்டாக மகா சிவராத்திரி விழாவை கொண்டாடும் விதமாக தனியார் திருமண மண்டபத்தில் 50 பெண்கள் ஒன்றிணைந்து ஒரே இரவில் 3 ஆயிரம் தேங்காய்களை கொண்டு மிக பிரம்மாண்டமான சிவலிங்கத்தை வடிவமைத்தனர். இந்த சிவலிங்கத்தை பொதுமக்கள் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தும் செல்ஃபி எடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நாள் இரவில் 3000 தேங்காய்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட சிவலிங்கம் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தது.

Maha Shivaratri 2023: மகா சிவராத்திரி... சேலத்தில் 3 ஆயிரம் தேங்காய்களை கொண்டு சிவன் சிலை

இதேபோன்று, சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 13 அடியில் ஒரு லட்சத்து 50,008 ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் மற்றும் ஆரிய வைசிய சமாஜம் இணைந்து கடந்த மூன்று நாட்களாக ருத்ராட்சத்தில் சிவன் சிலையினை வடிவமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிவனை காண அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிவன் சிலையானது அடுத்த ஐந்து நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளது.

Maha Shivaratri 2023: மகா சிவராத்திரி... சேலத்தில் 3 ஆயிரம் தேங்காய்களை கொண்டு சிவன் சிலை

இதுகுறித்து வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் தலைவர் சுரேஷ் குப்தா கூறுகையில், “ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று புதிய உலக சாதனை முயற்சி செய்து வருகிறோம். அதன்படி இந்த ஆண்டு 13 அடியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களை கொண்டு சிவன் சிலை அமைத்துள்ளோம். உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டதாக கூறினார். இதேபோன்று கடந்த ஆண்டு சந்தனங்களை கொண்டு ஒரு லட்சத்து எட்டு சிவலிங்கங்களை உருவாக்கி உலக சாதனை படைத்தோம். அதேபோன்று இந்த ஆண்டும் வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் நிர்வாகிகளை கொண்டு இந்த புதிய உலக சாதனை முயற்சி செய்துள்ளதாக கூறினார். அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த ருத்ராட்ச சிவன் மக்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். எனவே அனைவரும் கோவிலுக்கு வந்து சிவன் அருள் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார். 

இதுபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலங்களில் சிவனுக்கு நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் சிவன் பக்தர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகளை கண்டு களித்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று மாலை தொடங்கி சிவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி அன்று சிவபெருமானைக் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget