மேலும் அறிய

வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..

பல வண்ண மலர்களாலும்,மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால் சுவாமி வாணவேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

காஞ்சிபுரம் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் மகாவிஸ்வரூப தரிசனம் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் புரட்டாசி மாகாளிய அமாவாசை மறுதினத்தில் இருந்து நவராத்திரி கொலு ஒன்பது நாள் வழிபடுவர். அந்த வகையில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் 46 ஆம் ஆண்டு கோவிலின் தர்மகத்தா வடிவேலு தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி ஒன்பது நாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவற்றை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனை தரிசித்து வந்தனர். 


வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..

மகிஷாசுரன் வதம் நிகழ்வு 

அந்த வகையில் ஒன்பதாம் நாள் அரக்கன் மகிஷாசுரன் வதம் செய்யும் நாளாகவும் பராசக்தி வெற்றி அடைந்த நாளாகவும், கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிஷாசூரன் மரமாக உறுமாரியதை கோவிலின் முன்பு வாழைமரத்தை வாழைதாருடன் கூடிய வாழைப்பூ மரத்தை நடப்பட்டு, ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவில் வாசலில் 20 அடிக்கும் மேலாக காணப்பட்ட வாழைமரத்திற்க்கு பூஜைகளும் தீபாரதனைகளும் செய்யப்பட்டது. 


வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..

மரமாக காட்சியளிக்கும் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியை ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரண்டு இருந்து கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனின் மகா விஸ்வரூப தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் இதில் பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ வேணுகோபால் சுவாமி பஜனைக் கோயில்

காஞ்சிபுரம் அடுத்த ஏரிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையானதும், பிரசித்திப்பெற்றதுமான அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால் சுவாமி பஜனைக் கோவிலில் 75ம் ஆண்டு புரட்டாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..

காஞ்சிபுரம் அடுத்த ஏரிவாக்கம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையானதும், பிரசித்திப்பெற்றதுமான அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால் சுவாமி பஜனைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல தலைமுறைகளாக புரட்டாசி மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு 75ம் ஆண்டு புரட்டாசி மாத திருவிழாவானது கிராம பொது மக்கள் ஏற்பாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

சுவாமி திருவீதி உலா

அதையொட்டி காலை வேணுகோபால் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து,மாலை வேளையில் சிறப்பு பூஜையானது நடந்தேறி தீபாராதனைகள் காட்டப்பட்டது. அதனைதொடர்ந்து பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் வேணுகோபால் சுவாமி காட்சியளித்தார்.இதன்பின் தீபாராதனைகள் காட்டப்பட்ட பின்னர், நாதஸ்வரம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க ,கரகாட்டம் ஆடிட, வாணவேடிக்கையுடன் கிராம வீதிகளில் வேணுகோபால் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.


வாழை மரத்தை வைத்து நடந்த நூதன திருவிழா பற்றி தெரியுமா? களைக்கட்டிய காஞ்சிபுரம் கோயில்கள்..

வழி நெடுகிலும் ஏராளமான கிராம பொது மக்கள் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் திரு வீதி உலா வந்த வேணுகோபால் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வேண்டி விரும்பி வழிபட்டனர். மேலும் இவ்விழாவில் அனைவருக்கும் அன்னதான பிரசாதமும், அருட்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஸ்ரீ கலைமகள் நாடக மன்றம் நாடக கூத்துடன் இத்திருவிழாவானது நிறைவுபெறுகிறது. 75ம் ஆண்டு புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு ஏரிவாக்கம் கிராமே திருவிழா கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget