மேலும் அறிய

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மூலஸ்தான அம்பாள் திருக்கோலத்தில் அங்குச பாசத்துடன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அன்னை  காமாட்சி ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் நவராத்திரி நிறைவு விழாவாக ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்பாள் மூலஸ்தான அம்பாள் திருக்கோலத்தில், அங்குச பாதத்துடன் லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய அம்பாளுக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் பேரருளை பெற்று சென்றனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் குங்குமப்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
காஞ்சி காமாட்சி வரலாறு
 
காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.
 

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள்.
 
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.
 
பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.

நவராத்திரி நிறைவு விழா.. ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த காஞ்சி காமாட்சி ...!
 
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நோய் தீர்க்கும் வைத்தியநாதர் சன்னதியில் குவிந்த பக்தர்கள்: சித்திரை முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
நோய் தீர்க்கும் வைத்தியநாதர் சன்னதியில் குவிந்த பக்தர்கள்: சித்திரை முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு தீர்த்தவாரி: புதன் பகவானுக்கு மகா அபிஷேகம்!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு தீர்த்தவாரி: புதன் பகவானுக்கு மகா அபிஷேகம்!
Tamil New Year 2026: இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!
Tamil New Year 2026: இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!
Chithirai Kani Kanuthal: சித்திரை கனி காணுதல் பலன்கள்.. ஏப்ரல் 14ம் தேதி இதை செய்ய மறக்காதீங்க!
Chithirai Kani Kanuthal: சித்திரை கனி காணுதல் பலன்கள்.. ஏப்ரல் 14ம் தேதி இதை செய்ய மறக்காதீங்க!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
TVK Vijay: சென்னையில் இன்று விஜய் பரப்புரை! எந்த ஏரியாவில் எத்தனை மணிக்கு?
USA Iran War: ”இனிமே உங்களால் எண்ணெயும் விக்க முடியாது” வெறி ஆகி ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்த முடிவு
USA Iran War: ”இனிமே உங்களால் எண்ணெயும் விக்க முடியாது” வெறி ஆகி ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்த முடிவு
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Delimitation: தொகுதி மறுவரையறை! தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்? என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Vedanta Power Plant: வேதந்தா பவர் ப்ளாண்டில் வெடித்த ப்ராய்லர் - 13 பேர் பலி, 21 பேர் படுகாயம் - காரணம் என்ன?
Vedanta Power Plant: வேதந்தா பவர் ப்ளாண்டில் வெடித்த ப்ராய்லர் - 13 பேர் பலி, 21 பேர் படுகாயம் - காரணம் என்ன?
Mahindra SUV Car Offers: ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி.. மஹிந்திரா கார்களுக்கு மாஸ் ஆஃபர் - எந்தெந்த கார் தெரியுமா?
Mahindra SUV Car Offers: ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடி.. மஹிந்திரா கார்களுக்கு மாஸ் ஆஃபர் - எந்தெந்த கார் தெரியுமா?
Volkswagen Taigun: சொன்னபடியே புதிய டைகன் வந்தாச்சு..! புதுசா என்ன கொடுத்து இருக்காங்க? ரூ.11 லட்சத்திற்கு வொர்த்தா?
Volkswagen Taigun: சொன்னபடியே புதிய டைகன் வந்தாச்சு..! புதுசா என்ன கொடுத்து இருக்காங்க? ரூ.11 லட்சத்திற்கு வொர்த்தா?
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Embed widget