மேலும் அறிய

காஞ்சிபுரம் : நிரம்பிய நடவாவிக்கிணறு..! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

காஞ்சிபுரம் அருகே தொடர் கன மழை காரணமாக, நடவாவிக்கிணறு முற்றிலுமாக மழை நீரால் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்துள்ள ஐயங்கார்குளம் பகுதியில், சஞ்சீவிராயர் கோவில் அமைந்துள்ளது. சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே,  உள்ள பெரிய குளத்தின்,  விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அறியப்படும், 14ம் நூற்றண்டு காலத்து நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது.

காஞ்சிபுரம் : நிரம்பிய நடவாவிக்கிணறு..! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?
 
"நடவாவி"
 
நடவாவி என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று அர்த்தம். இந்தக் கிணற்றுக்கு செல்ல தரை மட்டத்தில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்தப் பாதையில் இறங்கிச் சென்றால் கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் தரைமட்டத்தில் இருந்து கீழே செல்ல 48 படிகள் உள்ளன. இதில் 27 படிகளைக் கடந்தால் அந்த 16 கால் மண்டபத்தை நாம் அடைய முடியும். 

காஞ்சிபுரம் : நிரம்பிய நடவாவிக்கிணறு..! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?
சித்ரா பௌர்ணமி
 
மேலும் இந்தக் கிணற்றுக்குள் செல்ல  அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால்  எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்த நடவாவிக்கிணற்றிலுள்ள, பெரிய கிணற்றில் வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே  உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, அன்று மாலை பூமிக்கு அடியில் கிணறு அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமானை எழுந்தருளப் செய்வார்கள். அதன் பின் மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அப்போது இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். 
 

காஞ்சிபுரம் : நிரம்பிய நடவாவிக்கிணறு..! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?
நிரம்பிய நடவாவி கிணறு
 
குறிப்பாக இந்த நடவாவிக்கிணறு வான்வழி பார்வையில் இந்த கிணறு சாவி போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாண்டஸ் புயல் மற்றும் வடக்கிழக்கு பருவமழையை யொட்டி பெய்த தொடர் கன மழையின் காரணமாக இந்த நடவாவிக்கிணறு முற்றிலுமாக மழை நீரால் நிரம்பி பார்ப்பதற்கு மிக ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
 
தற்போது நடவாவிக்கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நான்கு படிக்கட்டுகள் மட்டுமே நீரில்லாமல் வெளியே தெரிகிறது. மீதமுள்ள அனைத்து படிக்கட்டுகளும் முழுவதுமாக நீர் நிரம்பி காணப்படுகிறது.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget