மேலும் அறிய

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு

காவிரி ஆற்றில் ஒரு வாரத்திற்கு பிறகு நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பெய்து வந்தது. இதனால் காவேரி ஆற்றில் நீர்வரத்து மாறி, மாறி அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியாக குறைந்து வந்தது. இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து மேலும் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்குப் பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 6500 கன அடியிலிருந்த வினாடிக்கு 5000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு நீர் வரத்து குறைந்து இருந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
 

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு
மேலும் நீர்வரத்து குறையாமல் ஒரே சீராக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ், சமையல் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
 
தருமபுரியில் உள்ள  பிரசித்தி பெற்ற மிகப் பழமையான கோட்டை சிவாலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியிலிருந்து, 5000 கன அடியாக சரிவு
 
ஆருத்ரா தரிசன விழாவை வெட்டி தமிழக முழுவதும் உள்ள சிவன் ஆலயத்தில் விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாஜீன சுவாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி இன்று காலை சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசன காட்சியும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இந்த ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சி  வழிபாட்டில், தருமபுரி நகர் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுரியில் உள்ள கோட்டை மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை காண்பதற்காக அதிகாலை முதலிலேயே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக, கோவில் நிர்வாகம் சாராபில் வழங்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget