மேலும் அறிய

கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

கரூர் மாநகரில் ஆற்றகங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயில்.

 அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.


கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

 

கரூர் மாநகரில் அமராவதி ஆற்றகங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் மார்கழி மாத கடந்த 23-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய திருவிழாவான பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. அதிகாலையிலேயே உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனை தொடர்ந்து உற்சவர் பரமபத வாசல் முன்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

அதன் பின்பு அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் கோயிலை வலம் வந்தார். பின்னர் கோயிலின் முன்புறம் உள்ள உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா, கோவிந்தா என சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 


கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஆலயத்தில் அதிகாலை முதல் வைகுண்ட ஏகாதசி யோட்டி பரமபதம் வாசல் வழியாக பெருமாள் காட்சியளித்து இதில் திரளான பக்தர்கள் மனம் உருகி கோவிந்தா கோவிந்தா என வழிபட்டனர்.


குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. திரளான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.

கரூர் மாவட்டம், குளித்தலையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பராந்தக சோழன்,  வீரபாண்டியன் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உற்சவருக்கு  சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டன.


கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

 

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவர், நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் ராமானுஜர் ஆகிய உற்சவர்களுடன்  சொர்க்க வாசலை கடந்த பின்னர் திரளான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற நாமம் முழங்க சொர்க்க வாசலை கடந்து வந்தனர். பின்னர் மண்டபத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவருக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலையே  ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


கரூரில் உள்ள மேட்டு தெரு ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயம், குளத்துப்பாளையம் ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயம் மற்றும் பண்டரிநாதன் தெருவில் உள்ள பண்டரிநாதன் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை முதல் இன்று இரவு வரை ஏராளமான பக்தர்கள் ஆலயம் வர இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget