மேலும் அறிய

கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

கரூர் மாநகரில் ஆற்றகங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயில்.

 அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.


கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

 

கரூர் மாநகரில் அமராவதி ஆற்றகங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் மார்கழி மாத கடந்த 23-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய திருவிழாவான பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. அதிகாலையிலேயே உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனை தொடர்ந்து உற்சவர் பரமபத வாசல் முன்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

அதன் பின்பு அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் கோயிலை வலம் வந்தார். பின்னர் கோயிலின் முன்புறம் உள்ள உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா, கோவிந்தா என சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 


கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஆலயத்தில் அதிகாலை முதல் வைகுண்ட ஏகாதசி யோட்டி பரமபதம் வாசல் வழியாக பெருமாள் காட்சியளித்து இதில் திரளான பக்தர்கள் மனம் உருகி கோவிந்தா கோவிந்தா என வழிபட்டனர்.


குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. திரளான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.

கரூர் மாவட்டம், குளித்தலையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பராந்தக சோழன்,  வீரபாண்டியன் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உற்சவருக்கு  சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டன.


கரூரில் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.

 

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவர், நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் ராமானுஜர் ஆகிய உற்சவர்களுடன்  சொர்க்க வாசலை கடந்த பின்னர் திரளான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற நாமம் முழங்க சொர்க்க வாசலை கடந்து வந்தனர். பின்னர் மண்டபத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவருக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலையே  ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


கரூரில் உள்ள மேட்டு தெரு ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயம், குளத்துப்பாளையம் ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயம் மற்றும் பண்டரிநாதன் தெருவில் உள்ள பண்டரிநாதன் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை முதல் இன்று இரவு வரை ஏராளமான பக்தர்கள் ஆலயம் வர இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Air India Express special offer: வெறும் ரூ.1950க்கு விமான டிக்கெட்.! பயணிகளுக்கு ஜாக்பாட்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அசத்தல் அறிவிப்பு
வெறும் ரூ.1950க்கு விமான டிக்கெட்.! பயணிகளுக்கு ஜாக்பாட்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அசத்தல் அறிவிப்பு
Embed widget