![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Aadi krithigai 2023: திண்டிவனம் கிடங்கல் முருகன் கோயிலில் மிளகாய் அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
(Aadi krithigai) திண்டிவனம் கிடங்கல் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் மிளகாய் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும் நடைபெற்றது.
![Aadi krithigai 2023: திண்டிவனம் கிடங்கல் முருகன் கோயிலில் மிளகாய் அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் Aadi krithigai 2023 Devotees perform abhisheka with chillies at Tindivanam Kitangal Murugan temple TNN Aadi krithigai 2023: திண்டிவனம் கிடங்கல் முருகன் கோயிலில் மிளகாய் அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/855b5ed71e7bfa781d5c9741035cf2bf1691575380944113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: திண்டிவனம் கிடங்கல் கோட்டை வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமானுக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்ப நாயக ஈஸ்வரர் சிவாலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி, தெய்வயானை உடனுறை ஆறுமுகப் பெருமானுக்கு 57ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் கோபூஜையுடன் துவங்கிய விழாவில் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நந்திகேஸ்வரர் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்பட்டது. பின்னர் செடல் ராட்டினத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது.
அதே போல் மூலவர் அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் அன்ப நாயக ஈஸ்வரருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு கிடங்கல் அகழிக் குளக்கரையிலிருந்து சக்தி கலசம் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று காலை சக்திவேலுக்கும், காவடிகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும், மழுவடி சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து 108 வேலும், சடலும் அணிவித்தலும் மற்றும் பழங்கள் அணிவித்தலும், செடல் ராட்டினமும் நடைபெற்றது. அதனை அடுத்து தீ மிதித்து ரதமும், காவடிகளும் வீதி உலா வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)