மேலும் அறிய

இந்தியாவுக்கு சபாஷ் சொன்ன தலிபான்கள்;  தூதரகத்தை சிதைக்க மாட்டோம் எனவும் உறுதி!

ஆப்கானிஸ்தானையே ஆட்டிப்படைத்து வரும் தலிபான்கள் இந்தியாவுக்கு மட்டும் சபாஷ் சொல்லியிருக்கிறார்கள் ஏன் தெரியுமா? ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய இந்தியா எடுத்த முயற்சிகளுக்காகத் தான் இந்த சபாஷ்.

ஆப்கானிஸ்தானையே ஆட்டிப்படைத்து வரும் தலிபான்கள் இந்தியாவுக்கு மட்டும் சபாஷ் சொல்லியிருக்கிறார்கள் ஏன் தெரியுமா? ஆப்கானிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய இந்தியா மேற்கொண்ட சீரிய முயற்சிகளுக்காகத் தான் இந்த சபாஷ்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், அல் கொயதா தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் முழுக் கவனமும் திரும்பியது. அல் கொய்தாவின் ஒசாமா பின் லேடனுக்கு ஆப்கனின் தலிபான் தீவிரவாதிகள் அடைக்கலம் கொடுத்தது தெரிய வந்தது. இதனால், உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்தது. அல் கொய்தாவை எதிர்க்க ஆப்கனுடன் சேர்ந்து தலிபான்களையும் எதிர்த்தது.

அல்கொய்தா கூண்டோடு ஒழிந்தது. தலிபான்கள் குழுவும் அடங்கியது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் அங்கிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கியுள்ளன. இதனால், தலிபான்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12க்கும் மேற்பட்ட மாகாணங்களை தலிபான்கள் ஆக்கிரமித்துவிட்டன.

ஒன்றும் செய்யமாட்டோம்:

ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தன.
கடந்த 3 மாதங்களாக ஆப்கானிஸ்தான் மீண்டும் கலவர பூமியாக மாற்றியிருப்பதால் அங்கிருந்து மற்ற நாடுகள் தங்கள் கட்டுமானப் பணிகளை நிறுத்திவிட்டு வெளியேறுவிட்டன. 

இந்தியாவும், படிப்படியாக தனது பணிகளை நிறுத்திக் கொண்டுள்ள நிலையில் அங்குள்ள தூதரகத்துக்கும், இந்திய அரசு மேற்கொண்ட கட்டுமானப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என கவலை தெரிவித்திருந்தது.
கடந்த வாரம் வெளியுறவுத் துறை செயலர் அநிந்தம் பாக்சி பேசுகையில், ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது. வர்த்தக ரீதியான விமான போக்குவரத்துகள் நிறுத்தப்படுகின்றன. ஆகையால் இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பவும் என்று கோரிக்கை விடுத்தார்.  இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாஹீன் கூறுகையில், "எந்த ஒரு தூதரகத்தையும் தாக்குவதில்லை என்று தலிபான்கள் உறுதியாக உள்ளனர். இந்தியா, உள்ளிட்ட நாடுகள் ஆப்கன் மக்களுக்காக மேற்கொண்டுள்ள கட்டுமானப் பணிகளை பாராட்டுகிறோம். அதனை நாங்கள் சிதைக்கமாட்டோம் என உறுதியளிக்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. அணைக்கட்டுகள், தேசிய நலனுக்கான கட்டுமானங்கள் என்று இந்திய அரசு ஆப்கனின் வளர்ச்சிக்காக நிறைய செய்துள்ளது. மக்களின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
ABP Southern Rising Summit 2025 LIVE: இன்று ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. எகிறும் எதிர்பார்ப்பு!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Embed widget