மேலும் அறிய

Sri Lanka Refugees: இலங்கைக்கு திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக குழு! நடைமுறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு ஏற்பாடு!

தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தாய்நாடு திரும்பும் முறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது.

இலங்கை அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ போர்க்காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயல்முறையை எளிமைப்படுத்துவதற்காக அதிபரின் செயலாளர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இலங்கையின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க தலைமையிலான இந்த குழுவில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிறப்பு அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Sri Lanka Refugees:  இலங்கைக்கு திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக குழு! நடைமுறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு ஏற்பாடு!

போர்க்காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையைச் சேர்ந்தவர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும் என “ ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு” வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இதுகுறித்து பேசுவதற்காக, அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இன்று அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டில் தற்போது சுமார் 58 ஆயிரம் இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாகவும், அவர்களில் 3 ஆயிரத்து 800 பேர் மட்டுமே இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை எளிமைப்படுத்துவதற்காக இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Refugees:  இலங்கைக்கு திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக குழு! நடைமுறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு ஏற்பாடு!

சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரலாயமும் இந்த செயல்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. பொது நிர்வாக அமைச்சரின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சக மற்றும் குடிவரவு குடியகல்வுத்  திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் பிரதமர் செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ்.சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். “

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்த நாட்டு அரசாங்கத்திற்கும் நடைபெற்ற போரின்போதும், இறுதி போரின்போதும் லட்சக்கணக்கான இலங்கை வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து தஞ்சமடைந்தனர். அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் முடிவுக்கு வந்தாலும் இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் சொந்த நாடு திரும்ப விருப்பமில்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் இலங்கையின் மோசமான பொருளாதார நிலையால் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget