மேலும் அறிய

Israel Hamas War: ஆயுத குழுவினர் பற்றி தகவல் கொடுத்த 2 பாலஸ்தீனியர்கள்.. கொடூர செயலில் ஈடுபட்ட ஹமாஸ்..

ஆயுத குழுவினர் தங்கி இருக்கும் இடம் தொடர்பான தகவலை இஸ்ரேலுக்கு சொன்ன 2 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொலை செய்து மின் கம்பத்தில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த வாரம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. வான் வழி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ளனர்.

 இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 6 வாரங்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்காலிகமாக 4 நாட்கள் மட்டும் போர் நிறுத்தி வைக்க இஸ்ரேல் அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சுமார் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 1,200 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த 6 ஆம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள துல்ஹரம் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. அதில் 3 ஆயுத குழுவினர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அந்த அகதிகள் முகாமில் ஆயுத குழுவினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கொடுத்ததாக 2 பாலஸ்தீனியர்களை ஆயுத குழுவினர் சுட்டுக் கொலை செய்தனர். பின் இரண்டு பேரின் உடலை பொது வெளியில் இருக்கும் மின் கம்பத்தில் கட்டித் தொங்க விட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க காசாவிற்கு தொடர்ச்சியாக அடிப்படை வசதிகளான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள் ஆகியவை லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க, எகிப்து, கத்தார் மற்றும் ஐ.நா தரப்பில் இந்த உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நான்கு நாள் போர் நிறுத்தத்தில் 17 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 இஸ்ரேலியர்களும் தாய்லாந்தை சேர்ந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்ரேலில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget