![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Israel Hamas War: ஆயுத குழுவினர் பற்றி தகவல் கொடுத்த 2 பாலஸ்தீனியர்கள்.. கொடூர செயலில் ஈடுபட்ட ஹமாஸ்..
ஆயுத குழுவினர் தங்கி இருக்கும் இடம் தொடர்பான தகவலை இஸ்ரேலுக்கு சொன்ன 2 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொலை செய்து மின் கம்பத்தில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Israel Hamas War: ஆயுத குழுவினர் பற்றி தகவல் கொடுத்த 2 பாலஸ்தீனியர்கள்.. கொடூர செயலில் ஈடுபட்ட ஹமாஸ்.. shooting of 2 Palestinians who gave information about the location of the armed group to Israel and hanging them from an electric pole has caused a stir. Israel Hamas War: ஆயுத குழுவினர் பற்றி தகவல் கொடுத்த 2 பாலஸ்தீனியர்கள்.. கொடூர செயலில் ஈடுபட்ட ஹமாஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/26/1102d64fa7dfb50c9781ab557893a8221700980479508589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இஸ்ரேல் மீது கடந்த வாரம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. வான் வழி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 6 வாரங்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்காலிகமாக 4 நாட்கள் மட்டும் போர் நிறுத்தி வைக்க இஸ்ரேல் அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சுமார் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 1,200 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
In West Jerusalem 2 Palestinians are summarily murdered for supposedly cooperating with Israel, their bodies displayed upside down. Selfie seekers lighting up the scene with their phones to record the event.
— David Atherton (@DaveAtherton20) November 25, 2023
I've long said Palestinians shouldn't be allowed even to run a bath. pic.twitter.com/me45oeCaBy
இதற்கு முன்பாக கடந்த 6 ஆம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள துல்ஹரம் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. அதில் 3 ஆயுத குழுவினர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அந்த அகதிகள் முகாமில் ஆயுத குழுவினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கொடுத்ததாக 2 பாலஸ்தீனியர்களை ஆயுத குழுவினர் சுட்டுக் கொலை செய்தனர். பின் இரண்டு பேரின் உடலை பொது வெளியில் இருக்கும் மின் கம்பத்தில் கட்டித் தொங்க விட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Today, the UN is delivering over 50 trucks containing humanitarian aid (food, water, shelter and medical supplies) to the northern Gaza Strip and to shelters that have not yet been evacuated.
— COGAT (@cogatonline) November 25, 2023
The aid is delivered through the evacuation corridor in coordination with Israel. pic.twitter.com/mjTtxspiwp
இது ஒரு பக்கம் இருக்க காசாவிற்கு தொடர்ச்சியாக அடிப்படை வசதிகளான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள் ஆகியவை லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க, எகிப்து, கத்தார் மற்றும் ஐ.நா தரப்பில் இந்த உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Representatives from the @ICRC just transferred 17 hostages via Egypt, including 13 Israeli and 4 Thai hostages, to ISA and IDF Special Forces, as they make their way to Israeli hospitals, where they will be reunited with their families.
— Israel Defense Forces (@IDF) November 25, 2023
We have been preparing to welcome our… pic.twitter.com/ulogSb2hk5
நான்கு நாள் போர் நிறுத்தத்தில் 17 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 இஸ்ரேலியர்களும் தாய்லாந்தை சேர்ந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்ரேலில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)