மேலும் அறிய

Queen Elizabeth II : லண்டனில் தொடங்கியது ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம்..! குவிந்த உலகத் தலைவர்கள்..!

ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் லண்டனில் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.,

இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் கடந்த 8-ந் தேதி காலமானார். அவரது இறுதி ஊர்வலம் லண்டனில் 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, லண்டன் மாநகரில் சற்றுமுன் மகாராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

முன்னதாக, ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரா அரண்மனையில் உயிர்பிரிந்த ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ராணியின் உடலுக்கு 24 மணி நேரமும் அரண்மனை பாதுகாவலர்கள் பாதுகாவலுக்கு இருந்தனர். இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாட்டு மக்களும் ராணிக்கு மணிக்கணக்கில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.


Queen Elizabeth II : லண்டனில் தொடங்கியது ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம்..! குவிந்த உலகத் தலைவர்கள்..!

இந்த நிலையில், ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-விற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது. இங்கிருந்து விண்ட்சர் கோட்டைக்கு ராணியின் உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லறை ஜெபம் நடைபெற உள்ளது.

ராணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதால், வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதி இன்று காலையிலே முடிவுக்கு வந்தது. ராணியின் உடல் கடற்படை பீரங்கி வண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட உள்ளது. 142 மாலுமிகள் இதை இழுத்துச்செல்வார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை பீரங்கி வண்டியில் வைத்து மாலுமிகள் இழுத்துச் செல்கின்றனர்.


Queen Elizabeth II : லண்டனில் தொடங்கியது ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம்..! குவிந்த உலகத் தலைவர்கள்..!

இந்த ஊர்வலத்தில் பீரங்கி வண்டிக்கு பின்னால் புதிய மன்னர், இளவரசர்கள் ஆகியோர் சென்று கொண்டிருக்கின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிற்கு சென்ற பிறகு இறுதிச்சடங்கு ஜெபக்கூட்டம் தொடங்க உள்ளது. இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, அபேவில் இருந்து ஹைட் பார்க் முனையில் உள்ள வெலிங்டன் வளைவு வரை ராணியின் சவப்பெட்டியை வீரர்கள் தூக்கிக்கொண்டு செல்வார்கள்.

ராணுவ வீரர்களும், போலீசாரும் அணிவகுப்பு நடத்த துப்பாக்கி குண்டுகள் முழங்கம். இறுதியாக பல்வேறு சடங்குகள், அணிவகுப்புகள் நிறைவு பெற்ற பிறகு ராணி எலிசபெத் உடல் புனித ஜார்ஜ் தேவாயலத்திற்குள் இடம்பெற்றுள்ள ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ராணியின் இறுதி ஊர்வலத்திற்காக உலகத்தலைவர்களும், லட்சக்கணக்கான மக்களும் குவிந்திருப்பதால் லண்டன் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget