மேலும் அறிய

பணியிடங்களில் மனதளவிலான துன்புறுத்தல்கள் அதிகம் - ஆய்வறிக்கை சொல்வது என்ன?

Global survey : பணி இடங்களில் மனதளவிலான துன்புறுத்தல் நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி இடங்களில் மனதளவிலான துன்புறுத்தல் நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் உள்ள நிறுவனங்களில் பணியாளர்கள் பெரும்பாலும் உளவியில் ரீதியிலான வன்முறைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உலக அளவில் பணியிடங்களில் நடைபெறும் வன்முறை மற்றும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் ஆகியவைகள் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளும் முதல் முயற்சியாக ஆய்வு மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலைத் தேடி வேறு இடங்களுக்கு செல்பவர்கள், பெண்கள் ஆகியவர்களின் அனுபவங்களை ஆய்வின் முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

121 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 75,000 பணியாளர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் சுமார் 22 சதவீதத்தினர் எதாவது ஒருவகையிலான வன்முறை நிகழ்வுகளை பணியிடங்களில் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஐ.நா.சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labor Organization),  Lloyds Register Foundation மற்றும் Gallup ஆகிய மூன்று நிறுவனங்களும் மேற்கொண்ட ஆய்வில் ஒருவரது மோசமான பணிச்சூழல் அவர்களை எப்படி மாற்றுகிறது, எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி கண்டறியப்பட்டுள்ளது.

"பணி இடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஒரு பரவலான மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்வு ஆகும்.  இது கடுமையான உடல் மற்றும் மனநல விளைவுகள் முதல் வருவாய் இழப்பு மற்றும் சமூக பொருளாதார இழப்புகள் வரை ஒருவருடைய வாழ்கையை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக 56 பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் படி, பணி இடங்கள், நிறுவனங்களில் நடைபெறும் வன்முறைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.  மேலும் 6.3 சதவீதத்தினர் உடல், உளவியல் மற்றும் பாலியல் வன்முறை போன்ற  துன்புறுத்தல் ஆகிய மூன்று வடிவங்களையும் எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். 

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 8.5 சதவீதம் பேர் உடல் ரீதியான வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்துள்ளதாக கூறியுள்ளனர். ஆண், பெண் என்ற பாலின பேதமின்றி அனைவரும் வன்முறையான சூழலை வேலை செய்யும் நிறுவனங்களின் சந்திப்பதாக தெரிவிக்கின்றனர். 
 6.3 சதவீதம் பேர் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்ததாக அறிக்கை கூறுகிறது. அவர்களில் 8.2% பெண்களும் மற்றும்  5 சதவீத ஆண்களும் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். 

பணி இடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களில் 60 சதவீதத்திற்கும்  அதிகமானோர் "இது போன்ற துன்புறுத்தல் நிகழ்வுகள் தங்களுக்கு பலமுறை நடந்துள்ளதாகவும்.” குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் பாலினம், இயலாமை நிலை, நாடு, இனம், தோல் நிறம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளதாக பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் பாகுபாட்டோடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறைகள், தீண்டாமை போன்ற நிகழ்வுகள் பணி இடங்களில் அதிகமாக நிகழ்வதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

இந்த முடிவுகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் வாசிக்க..

Teachers Appointment: இவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களே அல்ல - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Embed widget