மேலும் அறிய

Corona Virus: அதிவேகமாக பரவும் ஒமைக்ரான் க்ராக்கன் வைரஸ்...! பீதியில் மக்கள் - இதுக்கு இல்லயா சார் எண்டு..?

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன

கொரோனாவை விட அதன் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிக மாறுபாட்டைச் சந்தித்து வருகிறது எனலாம். ஒமைக்ரானின் XBB.1.5 வகைமையின் மற்றொரு ரகம் உலகம் முழுவதும் பரவிவருவது இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளை அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது. மேலும் இது தடுப்பூசி போடப்பட்டவர்களையும் பாதிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.

எக்ஸ்.பி.பி.1.5, இரண்டு வெவ்வேறு பி.ஏ.2 வகைகளில் இருந்து உருவானது. இதன் அதிகம் தொற்றும் 'ரீகாம்பினன்ட்' மாறுபாட்டைக் கொண்ட வகைமை தற்போது அமெரிக்காவில் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது கோவிட் நோயின் மிகவும் பரவக்கூடிய பதிப்பு. இதற்கு 'கிராக்கன் மாறுபாடு' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பரவி இப்போது குறைந்தது 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. XBB.1.5 என்பது ஓமிக்ரான் XBB வகைமையின் வழித்தோன்றலாகும். இது இரண்டு முந்தைய வகைமைகளான  BA.2.75 மற்றும் BA.2.10.1 ஆகியவற்றில் இருந்து உருவானதாகும்.


Corona Virus: அதிவேகமாக பரவும் ஒமைக்ரான் க்ராக்கன் வைரஸ்...! பீதியில் மக்கள் - இதுக்கு இல்லயா சார் எண்டு..?

இதற்கிடயே,

சீனாவில் இருந்து வருபவர்கள் மீதான கொரோனா கட்டுப்பாடுகள் சரியான முடிவு தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடாததால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வந்தது.

கட்டாய கொரோனா பரிசோதனை:

இந்நிலையில் சமீபத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருப்பது, சரியே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளிக்கையில், “ சீனாவில் கொரோனா பாதிப்பானது மிக அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், அது குறித்து முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை சீன அரசால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பதால், அது தன் நாட்டு மக்களை காக்கும் என நம்பி கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துகின்றன, இது சரியானது மட்டுமல்ல நியாயமானதும் தான்" என அவர் கூறியுள்ளார். 

 

சீனாவின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், சீனா கடந்த வாரம் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்தது.

கட்டுப்பாடுகளுக்கு தளர்வு:

கோவிட் தொற்றுநோயை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் வகையில் சீனாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை ரத்து செய்ய சீனா முடிவு செய்தது. இதற்கிடையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஃபைசரின் கோவிட் மருந்து பெய்ஜிங்கில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மெதுவாக கோவிட் உடன் வாழத் பழகி வருகிறது என்றே கூறவேண்டும். இதனால் கொரோனா தொடங்கியதிலிருந்து சீரான கோவிட் கட்டுப்பாடுகள் அமல் படுத்தி வந்த நிலையில் அதனை தற்போது சீன அரசாங்கம் தளர்த்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக,  வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இனி தனிமைப்படுத்த அவசியம் இல்லை என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.

புதைக்கக்கூடிய இடமில்லாத நிலை:

இந்த புதிய விதி ஜனவரி 8 முதல் அமலுக்கு வருகிறது. ஜனவரி 8ஆம் தேதி முன் வரை சீனாவில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் 5 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். சீனா தனது  கோவிட் கட்டுப்பாட்டு பாலிஸியை தளர்த்தியது உலக நாடுகளால் உற்று நோக்கப்பட்டது.  சீனாவில் கிராமப்புற நகரங்கள் தொற்றுநோய் பரவலை சமாளிக்க போராடும் போது கூட சமீபத்திய நடவடிக்கை வந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அதேபோல் சுடுகாடுகளில் இறந்தவர்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  தினசரி கோவிட் எண்ணிக்கையை சீனா தெரிவிப்பதை நிறுத்திவிட்டது. மேலும் கட்டாய கொரோனா பரிசோதனை தளர்த்திய நிலையில் உண்மையான தினசரி பாதிப்பு என்ன என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Nalla Neram Today Oct 22: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Nalla Neram Today Oct 22: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
RasiPalan Today: மகரத்துக்கு அனுசரிப்பு; தனுசுக்கு நன்மை: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
இந்திய விமானப்படையும் சிங்கப்பூர் விமானப்படையும் கூட்டாக ராணுவ பயிற்சி.! வியக்கும் உலகநாடுகள்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Embed widget