மேலும் அறிய

Nepal Prisoners: என்ன ஒரு புத்திசாலித்தனம்.! நேபாலில் கலவரத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 15,000 கைதிகள்

நேபாலில், ஆட்சியர்களுக்கு எதிரான வெடித்த புரட்சியால் ஏற்பட்ட கலவரத்தை பயன்படத்தி, நேபாள சிறைகளிலிருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாலில், ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மக்கள் கடும் கொந்தளிப்படைந்தனர். இதையடுத்து, அந்நாட்டில் புரட்சி வெடித்து பெரும் களவரம் மூண்டது. ஆட்சியாளர்களின் வீடுகள், நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரம் ஒருபுறம் நடக்க, அந்நாட்டு சிறைகளிலிருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களால் ஏற்பட்ட விழிப்புணர்வு

நேபாளில், சர்மா ஒலி பிரதமராக ஆட்சிபுரிந்துவந்த நிலையில், ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் அந்நாட்டு அமைச்சர்கள், ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகள் எந்த அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

சமூக ஊடகங்களை முடக்க முயன்ற நேபாள அரசு

இதனால், நேபாள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த பிரசாரத்தை ஒடுக்குவதற்காக, பதிவு செய்யப்படாத சமூக வலைதளங்களை கடந்த 4-ம் தேதியன்று நள்ளிரவு முதல் தடை செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இது இளம் தலைமுறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கடந்த 8-ம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் கூட, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்கள் நடத்திய அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு நடத்தியும், போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, ராணுவம் குவிக்கப்பட்டு, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ததோடு, சமூக வலைதளங்கள் மீதான தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனாலும், போராட்டக்காரர்கள் விடவில்லை. சமூக வலைதளங்கள் மூலமே விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

ராஜினாமா செய்த பிரதமர், ஜனாதிபதி

இதனால் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார். மறுபுறம், நாடாளுமன்றம், பிரதமர் வீடு, ஜனாதிபதி அலுவலகம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் ராணுவம் களமிறங்கி, நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் வசம் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

சிறைகளில் இருந்து தப்பிய 15,000 கைதிகள்

இந்த கலவரங்களுக்கு இடையே, நேபாளத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைகளிலிருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தப்பிக்கும்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும், தப்பியோடிய கைதிகளில் ஒருசிலரை மட்டுமே காவல்துறையினர் மீண்டும் பிடித்துள்ளதாகவும், சிலர் தாங்களாகவே சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, தலைமறைவாகியுள்ள கைதிகளை தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கிறது.

கலவரத்தை பயன்படுத்தி 15,000 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget