மேலும் அறிய

Nepal Prisoners: என்ன ஒரு புத்திசாலித்தனம்.! நேபாலில் கலவரத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 15,000 கைதிகள்

நேபாலில், ஆட்சியர்களுக்கு எதிரான வெடித்த புரட்சியால் ஏற்பட்ட கலவரத்தை பயன்படத்தி, நேபாள சிறைகளிலிருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாலில், ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மக்கள் கடும் கொந்தளிப்படைந்தனர். இதையடுத்து, அந்நாட்டில் புரட்சி வெடித்து பெரும் களவரம் மூண்டது. ஆட்சியாளர்களின் வீடுகள், நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரம் ஒருபுறம் நடக்க, அந்நாட்டு சிறைகளிலிருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களால் ஏற்பட்ட விழிப்புணர்வு

நேபாளில், சர்மா ஒலி பிரதமராக ஆட்சிபுரிந்துவந்த நிலையில், ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் அந்நாட்டு அமைச்சர்கள், ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகள் எந்த அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

சமூக ஊடகங்களை முடக்க முயன்ற நேபாள அரசு

இதனால், நேபாள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த பிரசாரத்தை ஒடுக்குவதற்காக, பதிவு செய்யப்படாத சமூக வலைதளங்களை கடந்த 4-ம் தேதியன்று நள்ளிரவு முதல் தடை செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இது இளம் தலைமுறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கடந்த 8-ம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் கூட, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்கள் நடத்திய அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு நடத்தியும், போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, ராணுவம் குவிக்கப்பட்டு, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ததோடு, சமூக வலைதளங்கள் மீதான தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனாலும், போராட்டக்காரர்கள் விடவில்லை. சமூக வலைதளங்கள் மூலமே விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

ராஜினாமா செய்த பிரதமர், ஜனாதிபதி

இதனால் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார். மறுபுறம், நாடாளுமன்றம், பிரதமர் வீடு, ஜனாதிபதி அலுவலகம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் ராணுவம் களமிறங்கி, நாட்டின் பாதுகாப்பு பணிகளை தங்கள் வசம் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

சிறைகளில் இருந்து தப்பிய 15,000 கைதிகள்

இந்த கலவரங்களுக்கு இடையே, நேபாளத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைகளிலிருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தப்பிக்கும்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும், தப்பியோடிய கைதிகளில் ஒருசிலரை மட்டுமே காவல்துறையினர் மீண்டும் பிடித்துள்ளதாகவும், சிலர் தாங்களாகவே சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, தலைமறைவாகியுள்ள கைதிகளை தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கிறது.

கலவரத்தை பயன்படுத்தி 15,000 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
Trump Vs Mojtaba Khamenei: ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!
Iran on Hormuz: அப்பாடா.! இந்தியாவுக்கு நிம்மதி; பெட்ரோல், டீசல் பிரச்னை வராதுன்னு நம்பலாம்; ஈரானின் முக்கிய அறிவிப்பு
அப்பாடா.! இந்தியாவுக்கு நிம்மதி; பெட்ரோல், டீசல் பிரச்னை வராதுன்னு நம்பலாம்; ஈரானின் முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget