மேலும் அறிய

இலங்கை பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவ படையணிகளுக்காக வீணடிக்கப்படுகிறதா பொருளாதாரம்?

இலங்கையின் 30 வருட கால யுத்த வரலாற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக, ராணுவத்தினருக்காக இலங்கை அரசு அதிகளவிலான பணத்தை செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வடக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவ படையணிகளுக்காக வீணடிக்கப்படும் பணம்- புலம்பெயர் அமைப்புகள் குற்றச்சாட்டு
 
இலங்கையின் வடக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 16 ராணுவ படையணிகளுக்கு, அந்நாட்டு அரசு பணத்தை வீணடிப்பதாக புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும்  ராணுவ படையணிகளை மீளப் பெறுமாறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.வடக்கு பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 16 ராணுவப்படையணிகளுக்கு இலங்கை அரசு பெருமளவிலான தொகை பணத்தை செலவிட்டு வருவதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்த ராணுவ படையணிகளின் செலவீனம்  காரணமாக, அரசாங்கத்தின் டாலர் கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த வருடமும்  2,55,000  பாதுகாப்பு படையினருக்காக  373 பில்லியன் ரூபா பெருமளவிலான பணத்தை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்தப் படையணிகளை பராமரிப்பதற்கு இலங்கை அரசு பெருமளவு பணத்தை செலவழிப்பதாக புலம்பெயர் அமைப்புகள்,  சர்வதேச நாணய நிதியத்தின் அவதானத்துக்கு கொண்டு  சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது .
 
ஆகவே இந்த படையணிகளை வடக்கிலிருந்து விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதிகளவான பண விரயமாதல் தவிர்க்கப்படும் என சொல்லப்படுகிறது.இந்த 16 ராணுவ படையணிகளையும் தனியாக பராமரிப்பதன் காரணமாகவே  இலங்கை அரசின் டாலர் கையிருப்பு குறைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இலங்கை அரசின் ராணுவத்திற்கான செலவீனங்கள் குறித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் புலம்பெயர் அமைப்புகளால் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது இலங்கை ராணுவ படையணிகளுக்கான செலவீனம் 14 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தற்போதுள்ள கோத்தபாய ராஜபக்ஷ அரசின் தேர்தல் கொள்கை என்பது தேசிய பாதுகாப்பு ஆகும்.
 
ஆகவே குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ராணுவ படையணிகளை வைத்து அதற்காக பில்லியன் கணக்கில் செலவிடுவது என்பது இலங்கையின் வருமானத்தை மிகவும் பாதிக்கும் என கருதப்படுகிறது .பொதுவாக  இலங்கையில் இறுதி யுத்தம் முடிந்த பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் பணத்தொகை என்பது மிகவும் அதிகமானது என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன .
 
இந்நிலையில் வடக்கு பிரதேசங்களில் அதிகளவான ராணுவத்தினரை குவித்து அவர்களுக்கு தொடர்ந்து செலவுகளை செய்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் வீணானது என சொல்லப்படுகிறது.வடக்கு கிழக்கு பகுதிகளை பொறுத்த அளவில் தற்போது அங்கு அமைதியான சூழல்  நிலவுகிறது, ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாழும் தென்னிலங்கை பகுதியில் தற்போது பாதுகாப்பாற்ற ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது .ஆகவே வடக்கு பகுதியில் இருக்கும் ராணுவத்தினரை ,அகற்றி தென் இலங்கையின் பாதுகாப்பு பணியிகளில் நாட்டம் செலுத்துவது சிறந்தது என கருதப்படுகிறது.இலங்கையின் 30 வருட கால யுத்த வரலாற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக, ராணுவத்தினருக்காக இலங்கை அரசு அதிகளவிலான பணத்தை செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னரும் பாதுகாப்பற்ற பகுதிகள் என கருதப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிக அளவிலான ராணுவத்தினரை குடியமர்த்தி அவர்களுக்கு வீண் செலவுகளை இலங்கை அரசு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.ஆகவே இந்த செலவுகளை குறைக்க பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இது ஒரு குறித்த தீர்வாக இருக்கும் என புலம்பெயர் அமைப்புகளால் கருதப்படுகிறது .நாட்டு மக்கள் வறுமையில் தவிக்கும் இந்த நிலையில், இலங்கை அரசு ,பாதுகாப்பு நடவடிக்கை எனக்கூறி ராணுவத்திற்கு தொடர்ந்தும் பணத்தை ஒதுக்கீடு செய்து வருவதில் எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பப்படுகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget