மேலும் அறிய

86ஆவது திருமணம் செய்யும் நபர்... இம்முறை முன்னாள் மனைவியையே மீண்டும் கரம் பிடிக்கிறார்! காரணம் என்ன?

உள்ளூரில் 'பிளேபாய் கிங்' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்நபர், விவசாயம் செய்து வருகிறார். தனது 14 வயதில் முதன்முதலாக தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கான்.

இந்தோனேசியா, மேற்கு ஜாவாவைச் சேர்ந்த 61 வயது நபர்,  88ஆவது திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியா, மேற்கு ஜாவா, மஜலெங்காவைச் சேர்ந்த கான் எனும் இந்நபர், 86ஆவது முறையாக தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகமான ட்ரிபுன்நியூஸில் தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூரில் 'பிளேபாய் கிங்' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்நபர், விவசாயம் செய்து வருகிறார். தனது 14 வயதில் முதன்முதலாக தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கான்.

இந்நிலையில், தன் முன்னாள் மனைவி மீண்டும் தன்னை விரும்புவதாக வந்து தெரிவித்ததை அடுத்து தன்னால் அவருக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என கான் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் பிரிந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும், எங்களுக்கு இடையேயான காதல் இன்னும் வலுவாக உள்ளது. அந்த நேரத்தில் எங்களின் திருமணம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தது.

தற்போது திருமணம் செய்யவிருக்கும் என் முன்னாள் மனைவி இன்னும் என்னைக் காதலிக்கிறார். அப்போது எனது மோசமான அணுகுமுறை காரணமாக, திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனைவி என்னிடம் விவாகரத்து கோரினார்” என கான் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கோபமடைந்த கான் பல பெண்கள் தன்னைக் காதலிக்க ஆன்மீகத்தை நாடியதாகத் தெரிவித்துள்ளார். 

“பெண்களுக்கு நன்மை விளைவிக்காத செயல்களை செய்வதை நான்  விரும்பவில்லை. அவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடவும் எனக்கு விருப்பமில்லை. ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதை விட திருமணம் செய்துகொள்வதே சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

87 திருமணங்கள் செய்து கொண்டுள்ள கானுக்கு எத்தனை குழந்தைகள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மற்றொரு சம்பவம்

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் ஏழு பிள்ளைகளுடன் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள இருந்த தந்தையின் முயற்சியை அவரது பிள்ளைகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பேசுபொருளானது.

உத்தரப்பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த 55 வயதான ஷாபி அகமது எனும் இந்நபர் முன்னதாக ஐந்தாவது திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில், அவரது ஏழு குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் திருமண மண்டபத்துக்குள் அதிரடியாக நுழைந்து திருமணத்தை தடுத்துள்ளனர். 

திருமண மண்டபத்தில் அந்தக் குழந்தைகள் தாங்கள் யார் என்பதும் குறித்தும், தங்களது தாய்மார்கள் குறித்த அடையாளத்தை மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, அங்கு மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. 

இதையடுத்து அங்கு கூடியிருந்த ஏராளமான மக்கள், திருமணத்துக்குகு தயாராக இருந்த மணமகனை சரமாரியாகத் தாக்கியதால், மணமகன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்தோம்" என்றார்.

இந்நபர் தன் முதல் மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்களை விவாகரத்து செய்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது திருமணம் மனைவிகளிடம் ஒரு சில காரணங்களை கூறி புத்திசாலித்தனமாக பிரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget