மேலும் அறிய

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வர மதுரை-கொழும்பு இடையே மே முதல் விமான சேவை

வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வர மதுரை-கொழும்பு இடையே மே மாதம் முதல் விமான சேவை தொடக்கம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக அளவில் விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கான விமான சேவையும் ஏப்ரல் 30-ந்தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில நாடுகளுடன் இந்திய அரசு 'ஏர் பபுள்' என்ற பெயரில் சிறப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. 


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வர மதுரை-கொழும்பு இடையே மே முதல் விமான சேவை

அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 27-ந்தேதி முதல் மதுரை- கொழும்பு வழித்தடத்தில் விமானம் இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த முறை கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய போதே புலம்பெயர்ந்த பல தொழிலாளர்கள், நாடு திரும்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வந்தே பாரத் திட்டத்தில் பல நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு மத்திய அரசு சிறப்பு விமான சேவை இயக்கியது. அதன் மூலம் பலரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சிலர் நாடு திரும்பி, ஊரடங்கு வாபஸ் பெற்ற பிறகும் தாங்கள் பணியாற்றும் நாட்டுக்கு திரும்ப மனமின்றி இங்கேயே பணியை தொடர்கின்றனர். இன்னும் சிலர் பணியை விடுத்து மாற்றுத் தொழிலில் இறங்கியுள்ளனர். 

நிலைமை இப்படி இருக்கும் போது இலங்கையில் அதிக அளவில் புலம் பெயர்ந்தவர்கள் இருந்தும், இந்தியாவிற்கான பட்டியலில் அந்த நாடு சேர்க்கப்படாமல் இருந்தது. இப்போது அதற்கு தீர்வாக வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானம் இயக்கும் சேவையில் இலங்கையை இணைத்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களை சொந்த நாட்டில் கொண்டு சேர்க்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை விமான சேவைக்கு மதுரை பொருத்தமாக இருக்கும் என்பதாலும், குறுகிய கால பயணம் என்பதாலும் மதுரை-கொழும்பு விமான சேவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மே மாதத்தில் துவங்கும் அந்த சேவையால் ஆண்டு கணக்கில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்புள்ளது. 

மே 27 ல் துவங்கும் இந்த விமான சேவையால் இரு நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மே 27 துவங்குவதாக கூறியுள்ள சேவையை முன்கூட்டியே துவங்கினால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது ஒருபுறமிருக்க டிக்கெட் பதிவிற்கான அப்டேட் எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் சிலர் இப்போதே ஆர்வம்காட்டி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
Netanyahu Vs Trump: “அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
“அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
Embed widget